மும்பையில் படிக்கும் தமிழ் மாணவர்களின் கோரிக்கையை கவனத்தில் கொள்க! அமைச்சர் செங்கோட்டையனிடம் மு தமிமுன் அன்சாரி MLA கோரிக்கை!

மும்பையில் தமிழக அரசின் தமிழ் வழிக் கல்வி பாடத்திட்டத்தில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனிடம் , மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் அலைபேசியில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்தார்.

இதை பரீசிலிப்பதாக அமைச்சர் அவரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மஜக உறுதியான அணுகுமுறைகளை மேற்கொள்ளும் என தன்னை தொடர்பு கொண்ட மும்பை வாழ் தமிழர்களிடம் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் கூறினார்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தலைமையகம்
22.06.2020

Top