கூத்தாநல்லூர் முகம்மது ஷெரீப் மரணம்.! நேரடி களத்தில் மஜக பொருளாளர் எஸ் எஸ் ஹாரூன் ரசீது.!!

செங்கை.ஜூன்.15.,

உலகை உலுக்கும் கொரோனா தொற்று காரணமாக, உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பல்வேறு நாடுகளில் சிக்கியிருந்த இந்தியர்கள் நாடு திரும்பிக் கொண்டிருக்கின்றனர். சென்னைக்கு வரும் தமிழகத்தை சேர்ந்த பயணிகள் சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள விஐடி கல்லூரி வளாகத்தில் உள்ள தனிமைப்படுத்துதல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 12.6.2020 அன்று மலேசியாவில் இருந்து வந்திருந்த மஜக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களும், ஐக்கிய சமாதானப் பேரவை பொதுச்செயலாளர் முஜிபுர் ரகுமான் பாக்கவி அவர்களும் இந்த முகாமில் தங்கியுள்ளனர்.

மலேசியாவிலிருந்து வந்த கூத்தாநல்லூரைச் சேர்ந்த முஹம்மது ஷெரீப் என்பவருக்கு கடந்த 13.6.2020 அன்று மாலை உடல் நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகளிடமும் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை அளிக்க அதிகாரிகள் முன்வராத சூழலில் நேற்று (14.6.2020) காலை மீண்டும் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, மீண்டும் அதிகாரிகளிடம் சிகிச்சை அளிக்க கோரிக்கை வைத்தும் சிகிச்சை அளிக்கப்படவில்லை.

இந்நிலையில் நேற்று (14.6.2020) மாலை சுமார் 7.30 மணியளவில் முகமது ஷெரீப் அவர்கள் ரத்த வாந்தி எடுக்க, உடனடியாக அருகிலிருந்த திருநெல்வேலி ஏர்வாடியைச் சேர்ந்த மீரான் மைதீன் அவர்கள் மற்றொரு அறையிலிருந்த மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்களிடம் வந்து நடந்த சம்பவங்களை கூறினார். உடனடியாக ஷெரீப் அவர்கள் தங்கி இருந்த மாடிக்கு சென்று பொருளாளர் அவர்கள் பார்க்கும் பொழுது முகமது ஷெரீப் அவர்கள் குளியல் அறையில் மயங்கி விழுந்து கிடந்தார்.

உடனடியாக வளாகத்தில் இருந்த அதிகாரிகளிடம் சென்று நடந்த சம்பவங்களை கூறி சிகிச்சை அளிக்க கோரிய மஜக பொருளாளர் மேலதிகாரிகளையும் தொடர்பு கொண்டு நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

ரத்த வாந்தி எடுத்து ஏறத்தாழ ஒன்னறை மணி நேரத்திற்குப் பிறகே இரவு 9 மணிக்கு ஆம்புலன்ஸ் வந்தது. முகமது ஷெரீப் அவர்களை பரிசோதித்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ். ஹாரூன் ரசீது அவர்கள் முகமது ஷெரீப் அவர்களின் மருமகன் சுல்தான் அவர்களை தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை கூறி விரைவில் இறந்த உடலை பெற்று ஊருக்கு அனுப்பி வைக்கிறோம் என்றும், குடும்பத்தார் பொறுமை காத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் கூறினார்.

அரசு அதிகாரிகளின் அலட்சியப் போக்கினால் அநியாயமாக ஒரு உயிர் பலியாக்கப்பட்டது வேதனையிலும் வேதனை.

பின்னர் அங்கு வருகை தந்த காவல்துறை உயர் அதிகாரிகளிடம் மஜக மாநிலப்பொருளாளர் எஸ்.எஸ்.ஹாரூன் ரசீது அவர்கள் அதிகாரிகளின் அலட்சியப் போக்கினை எடுத்து கூறி குறிப்பிட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், நடவடிக்கை எடுக்க தவறினால் மஜக உள்ளிட்ட கட்சி மற்றும் அமைப்புகள் ஒன்றினைந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என்று தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிகழ்வுகளின் போது.. மஜக செங்கல்பட்டு வடக்கு மாவட்டச் செயலாளர் ஜிந்தா மதார், மாவட்ட துணைச்செயலாளர்கள் தாம்பரம் ஜாகிர், ஆலந்தூர் சலீம், அனகை அப்துல்லாஹ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்டச் செயலாளர் கண்டோன்மெண்ட் அப்துல் சமது, மனித உரிமைகள் அணி மாவட்டச்செயலாளர் பல்லாவரம் அப்துல்லாஹ் மேலும் கேளம்பாக்கம் அன்வர் உள்ளிட்ட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் பொருளாளருடன் உடனிருந்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#செங்கல்பட்டு_மாவட்டம்
15-06-2020