மஜக நெல்லை ஆற்றங்கரை பள்ளி கிளை சார்பாக அத்தியாவசிய பொருட்கள் விநியோகம்.!


நெல்லை.ஜூன்.13.,

கொரோனா காரணமாக ஊரடங்கில் வாழ்வாதாரம் இழந்து பல ஏழை எளிய குடும்பங்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அவர்களை கண்டறிந்து மனிதநேய ஜனநாயக கட்சியின் மாவட்டங்கள், பகுதி, கிளைகளின் சார்பாக அத்தியாவசிய உணவு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக மஜக நெல்லை மாவட்டம், ஆற்றங்கரை பள்ளி கிளை சார்பாக மூண்றாம் கட்டமாக 50 குடும்பங்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் தொழில் அதிபரும், தமிழக காங்கிரஸ் கமிட்டி OBC மாநிலச் செயலாளர் ஹைதர்அலி அவர்களும், சமூகஆர்வலரும், சஞ்சீவீ பார்மா தென்மண்டல மேளாளர் குல்முஹம்மது, மஜக மாநில துணைச் செயலாளர் A.R.சாகுல்ஹமீது, நெல்லை மாவட்டச் செயலாளர் நெல்லை நிஜாம், மாவட்டப் பொருளாளர் பேட்டை மூஸா, ராதாபுரம் ஒன்றிய செயலாளர் காஜா, நெல்லை பகுதி பொருளாளர் N.அப்பாஸ், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் மீராசாகிப் ஆற்றங்கரை கிளைச் செயலாளர் ஷரீப் ஆகியோர் கலந்துகொண்டு ஏழைகளுக்கு அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர்.

ஏளை, எளிய மக்களை கண்டறிந்து அத்தியாவசிய பொருட்கள் விநியோகிக்கும் பணி தொடரும் என நெல்லை மாவட்ட நிர்வாகிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
13-06-2020