மஜக துணை பொதுச்செயலாளர் சுல்தான் அமீர் அவர்களின் ரமலான் பெருநாள் வாழ்த்துச்செய்தி!!

அன்புடையீர்,
ஏக இறைவனின் அமைதியும், ஆசியும் சூழ்க.

உலகின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பெருநாளின் நல் வாழ்த்துக்களை தங்களுக்கு தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம்.

அன்பும், இரக்கமும், ஈகையும்,அரவணைத்தலுமே வாழ்வின் சிறப்புகளாகும்.

இந்த மனித நேய பண்புகள் மேலோங்க நாம் எல்லோரும் சகோதரத்துவத்துடன் இணைந்து பாடுபடுவோம்.

இன்று உலகை அச்சுறுத்தும் கொரணாவிலிருந்து மானுடம் மீளவும், நாம் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மகிழ்ச்சியோடு வாழவும் இப்புனித ரமலானில் இறைவனை பிரார்த்திக்கிறோம்.

இனிய ரமலான் பெருநாள் வாழ்த்துக்களை உரித்தாக்குகிறோம்.

அன்புடன்

சுல்தான்அமீர்
#துணைபொதுச்செயலாளர்
#மனிதநேய_ஜனநாயக _கட்சி
24.05.2020