தென்காசியில் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்த இளைஞர்கள்!!

தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்டு பலர் கட்சியில் இணைந்து வருகிறார்கள்.

இந்நிலையில் தென்காசியில் மஜகவினர் தொடர் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர், அப்பணிகளின்பால் ஈர்க்கப்பட்டு வடகரை பேரூர் பகுதியில் உள்ள இளைஞர்கள் தங்களை மஜக மாவட்டச் செயலாளர் பீர் மைதீன், மற்றும் கழக பேச்சாளர் இனாயத்துல்லா ஆகியோரின் முன்னிலையில் மஜக-வில் இணைத்துக் கொண்டனர்.

அவர்களுக்கு வடகரை பேரூர் கிளைச் செயலாளர் முகம்மது இலியாஸ், பொருளாளர் முகம்மது மீரான், ஆகியோர் உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினர்.

இந்நிகழ்வில் அவர்களுக்கு கட்சியின் கொள்கை கோட்பாடுகள் எடுத்துரைக்கப்பட்டது.

தகவல்;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
15/05/2020