நோன்பு நோற்ற நிலையில் மஜக தூத்துக்குடி மாவட்ட நிர்வாகிகள் இரத்ததானம்!

மே 9,

ஊரடங்கு தருணம் என்பதாலும், கொரோனா அச்சத்தின் காரணமாகவும் அரசு இரத்த வங்கியில் யாரும் இரத்த தானம் செய்ய முன்வராத நிலையில் ஏற்பட்டுள்ள இரத்த பற்றாக்குறையைப் போக்க இளையவேந்தன் இரத்ததான அறக்கட்டளை ஒருங்கிணைப்பில் தூத்துக்குடியில் உள்ள அனைத்து குருதிக் கொடையாளர்களையும் அழைத்து அரசு மருத்துவமனையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது.

இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாகிர் ஹூசைன் தலைமையில் மாவட்ட, மாநகர நிர்வாகிகள் ஐந்து நபர்கள் கலந்துக் கொண்டு இரத்த தானம் செய்தனர்.

மஜக நிர்வாகிகள் அனைவரும் ரமலான் நோன்பு நோற்றிருந்த நிலையில் இரத்ததானம் செய்தனர். அவர்களுக்கு மருத்துவர்களும், சக குருதி கொடையாளர்களும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர்.

தகவல் ;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தூத்துக்குடி_மாவட்டம்.