அத்தியாவசிய பொருட்களை தொடர்ந்து விநியோகிக்கும் திருவண்ணாமலை மாவட்ட மஜகவினர்


ஏப்ரல்.03.,

ஊரடங்கு காரணமாக திருவண்ணாமலை மாவட்ட மஜக-வினர் கடந்த 10 நாட்களாக தொடர் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று செங்கம் பகுதிகளில் அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத சூழலில் உள்ள ஏழ்மையான குடும்பத்தினருக்கு, தலா 1000 ரூபாய் மதிப்பிலான அரிசி, பருப்பு, எண்னெய், காய்கறிகள் என வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர் பாபு, நகரச் செயலாளர் ஜே.ஜே.ஜாகீர், நகரப் பொருளாளர் மெடிக்கல் முஸ்தபா, நகர துணைச் செயலாளர் காலு என்கின்ற லியாகத் ஆகியோர் அத்தியாவசிய உணவு பொருட்களை விநியோகித்தனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#திருவண்ணாமலை_மாவட்டம்
03-04-2020

Top