இளையான்குடியில் குடியுரிமை சட்டத் திருத்தத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்…! மவ்லா நாசர் பங்கேற்பு

#மஜகதலைமைஒருகிணைப்பாளர்மவ்லாநாசர்_பங்கேற்பு..!!!

சிவகங்கை.டிச.23..,

சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் புதிய குடியுரிமை சட்டத்தை கண்டித்து அனைத்து கட்சி, இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக தலைமை ஒருகிணைப்பாளர் மவ்லா.நாசர், மாநில துணைச் செயலாளர் திருமங்கலம் சமீம் ஆகியோர் பங்கேற்று கண்டன உரையாற்றினார்கள்.

போராட்டத்தில் மஜக மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து கட்சிகள், இயக்கங்களை சேர்ந்த திரளானோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#சிவகங்கை_மாவட்டம்.
21-12-2019

Top