மனிதநேய கலாச்சார பேரவை துபாய் மாநகரம் சார்பில் இரத்ததான முகாம்!!


நவ.30

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினத்தை முன்னிட்டு துபாய் மாநகர மனிதநேய கலாச்சார பேரவை மற்றும் கேரள கம்யூனிட்டி இணைந்து நடத்திய இரத்ததான முகாம் துபாய் Lathifa Hospital-ல் நடைபெற்றது.

இம்முகாமிற்கு அமீரக செயலாளர்
மதுக்கூர் S.அப்துல் காதர் அவர்கள் தலைமை தாங்கினார்.

இரத்ததான முகாமை 89.4 FMன் RJ நாகா, அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் அமீரக பொருளாளர் H.அபுல் ஹசன், அமீரக து.செயலாளர் A.அசாலி அஹ்மது, அமீரக கொள்கை பரப்பு செயலாளர் Y.அப்துல் ரெஜாக், IT Wing துணை செயலாளர் பொதக்குடி அசார், துபை மாநகர துணைச் செயலாளர்கள் பயாஸ் அகமது,சலீம், செயற்குழு உறுப்பினர் ஆசிப், துபாய் IT WING செயலாளர் N.சபீர் அஹமது மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியை துபை மாநகர பொருளாளர் லால்பேட்டை சபீக், அவர்கள் ஒருங்கிணைத்தார் இறுதியாக துபாய் மாநகர செயலாளர் ரஹ்மத்துல்லாஹ், அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.

இம்முகாமில் திரளானோர் கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தகவல்:

#MKP_தகவல்தொழில்நுட்பஅணி
#MKP_IT_WING
#மனிதநேயகலாச்சாரபேரவை
#துபாய்_மாநகரம்_UAE
29.11.2019