You are here

பள்ளப்பட்டி அல்மதரசத்துள்மஹ்மூதியாவின் ஐந்தாம்ஆண்டு நிறைவு விழா!, முதமிமுன்அன்சாரி MLA பங்கேற்பு

நவ.30,
கரூர் மாவட்டம் பள்ளப்பட்டி அல்-மதரசத்துள் மஹ்மூதியாவின் 5 ஆம் ஆண்டு நிறைவு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA., அவர்களும், ‘இலக்கு 2040’ அமைப்பின் நிறுவனர் ஆசிரியை சபரிமாலா அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று உரையாற்றினர்.

நிறைவாக போட்டிகளில் வென்றவர்களுக்கும், சாதனையாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், T.J. முஹம்மது ஜாவித், பள்ளப்பட்டி வடக்கு பள்ளி இமாம் மௌவுலானா மௌலவி அல்ஹாஜ் யஹ்யா ஹஸ்ரத், பள்ளப்பட்டி தமிமுன் அன்சாரி, இக்பால் தாவூதி, ஹாஜி ஜியாவுதீன், பாப்புலர் அபு மற்றும் முஹம்மது ரியாஸ் உட்பட ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவிகள் திரளாக பங்கேற்றனர்.

மஜக சார்பில் மாநில துணைச் செயலாளர் பாபு ஷாஹின்ஷா, கரூர் மாவட்ட செயலாளர் ஷேக் இஸ்மாயில், மாவட்ட துணைச் செயலாளர் அப்பாஸ், MJTS மாவட்ட செயலாளர் உவைஸ் அகமது, மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அபூபக்கர் சித்திக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் அபு, மைலம்பட்டி ஒன்றிய செயலாளர் ஷரீப் மற்றும் பள்ளபட்டி மஜக சகோதரர்கள் பலரும் திரளாக கலந்துக் கொண்டனர்.

தகவல் ;

#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#கரூர்_மாவட்டம்.

https://m.facebook.com/story.php?story_fbid=2124098944356536&id=700424783390633

Top