வேதாரண்யம் ஒன்றியத்தில் மஜக கிளை கூட்டம்!

நாகை.செப்.02., நாகை தெற்கு மாவட்டம், வேதாரண்யம் ஒன்றியம் துளசியாப்பட்டினம் மற்றும் கோடியகரையில் மஜக கூட்டம் மாவட்ட செயலாளர் பரக்கத் அலி தலைமையில் நடைப்பெற்றது.

இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில விவசாயிகள் அணி செயலாளர் நாகை முபாரக் கலந்து கொண்டார்.

துளசியாப்பட்டினம் கிளை சீரமைக்கப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கேரளா மக்களுக்காக வசூல் செய்யப்பட்ட வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்களை மாவட்ட நிர்வாகிகளிடம் கிளை நிர்வாகிகள் ஒப்படைத்தனர்.

கோடியகரையில் புதிய கிளை அமைக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

இந் நிகழ்வில் மாவட்ட துணை செயலாளர் ஷேக் மன்சூர், வேதை ஒன்றிய செயலாளர் அப்துல் சலிம், மாவட்ட மீனவரணி செயலாளர் செல்வமணி, IT WING மாவட்ட துணை செயலாளர் முபீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி.
#MJK _IT_WING.
#நாகை_தெற்கு_மாவட்டம்.
2.09.18