நோயாளிகளுடன் மஜக தலைவர்கள் மனிதநேய சந்திப்பு!

சென்னை.ஜூலை.24., சென்னை அண்ணா சாலை அரசினர் பல்நோக்கு மருத்துவ மனைக்கு இன்று #மனிதநேய_ஜனநாயக_கட்சி(மஜக) பொதுச் செயலாளர் #மு_தமிமுன்_அன்சாரி_MLA தலைமையில் மஜக நிர்வாகிகள் தைமியா, நாச்சிக்குளம் தாஜுதீன், சாதிக் பாஷா, மாநில துணை செயலாளர்கள் பொறியாளர் சைபுல்லாஹ்,பு துமடம் அனீஸ் ஆகியோர் வருகை தந்து அங்கிருந்த நோயாளிகளிடம் நலம் விசாரித்தனர்.

மருத்துவர்களின் வருகை, நர்ஸ்களின் சேவைகள், தற்போதைய நோயாளர்களின் உடல் நல முன்னேற்றம் குறித்தும் விசாரித்தனர்.

இது நல்லெண்ண ரீதியான, மனிதநேய சந்திப்பாகும்.

தமிழகமெங்கும் மஜக வினர் இது போன்ற சந்திப்புகளை மாதம் தோறும் நடத்தினால் , அது உள்ளங்களை பக்குவப்படுத்தும் என்றும்., சிறந்த ஒரு சேவை சார்ந்த மக்கள் சந்திப்பாகவும் அமையும் என்றும் கூறினார்.

தகவல்;

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#மத்திய_சென்னை_கிழக்கு_மாவட்டம்