திருவாரூர்.ஆக.07., காவேரி டெல்டா மாவட்டங்களை கபளீகரம் செய்யும் நோக்கோடு மீத்தேன், ஹைட்ரோகார்பன் திட்டங்களை தொடர்ந்து, தற்போது "பெட்ரோலிய ரசாயான முதலீட்டு மண்டலத்தை" டெல்டா மாவட்டங்களில் மத்திய அரசு தொடங்கியிருக்கிறது. இதில் நாகை, கடலூர் மாவட்டங்களை சேர்ந்த 46 கடலோர கிராமங்கள் பாதிக்கப்படுகின்றன. இதனை கண்டித்தும், விவசாய நிலங்களை பாதுகாக்கும் பொருட்டும், தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் தோழர் P.R. பாண்டியன் தலைமையில் இன்று தொடர் வாகன பிரச்சார இயக்கம் தொடங்கப்பட்டது. இப்பிரச்சாரத்தை மனிதநேய ஜனநாயக கட்சியின் (மஜக) பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆகஸ்ட் 14 வரை இப்பிரச்சாரப் பயணம் டெல்டா மாவட்டங்களில் நடைபெறவிருக்கிறது. இந்நிகழ்வில் மஜக மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன், மாநில விவசாய அணிச் செயலாளர் நாகை முபாரக், திருவாரூர் மாவட்ட செயலாளர் சீனி ஜெகபர் சாதிக், நாகை தெற்கு மாவட்ட பொருளாலர் வடகரை பரக்கத் அலி, மாவட்ட விவசாய அணி செயலாளர் நத்தர்கனி மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING திருவாரூர் மாவட்டம். 07.08.17
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
மாட்டு அரசியல் தூத்துக்குடியில் அனைத்து கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்… மஜக பங்கேற்பு.
தூத்துக்குடி.ஜூன்.06., இன்று 06:06:2017 காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் VVD சிக்னல் அருகில் திமுக , கம்யூனிஸ்ட் வலது, கம்யூனிஸ்ட் இடது, மனிதநேய ஜனநாயக கட்சி, விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், ஆதிதமிழர் பேரவை, மமக, மமமுக, தாமக, இ.யூ.முஸ்லீம் லீக், ஆதிதமிழர் கட்சி ஆகிய அனைத்து கட்சிகள் இணைந்து மாட்டு அரசியலில் ஈடுபடும் மத்திய மதவாத அரசைகண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாடம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திருமதி கீதா ஜீவன் MLA அவர்கள் தலைமை தாங்கினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் ஜாஹீர்உசேன் கண்டன உரையாற்றினார். ஒருங்கிணைப்பை ஏற்ப்படுத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் அர்ச்சுனன் அவர்களுக்கு மஜகவின் மாவட்ட செயலாளர் நன்றிதனைதெறிவித்தார். இந்நிகழ்வில் மஜகவின் தூத்துக்குடி, ஆத்தூர், உடன்குடி நிர்வாகிகளும் மற்றும் தூத்துக்குடி மாவட்ட தோழமை அமைப்பு நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. தூத்துக்குடி மாவட்டம். #MJK_IT_WING 06.06.2017
மாட்டிறைச்சி விவகாரம் மத்திய,மாநில அரசுகளை கண்டித்து அறந்தாங்கியில் அணைத்து கட்சி யினர் கண்டன ஆர்ப்பாட்டம்…மஜக பங்கேற்பு…
புதுகை.ஜூன்.06., மாவட்ட செயலாளர் முபாரக் அலி உரை உரை நிகழ்த்தினார் மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை எதிர்த்து மக்களை திரட்டி மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடும்-என பேசினார், ஆர்பாட்டத்தில் மஜக புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர் மாவட்ட செயலாளர் முபாரக் அலி மாவட்ட மாவட்ட பொருளாளர் அரசை சேக் இஸ்மாயில் மாவட்ட அவைத்தலைவர் அஜ்மீர் அலி மாவட்ட துணைச் செயலாளர் அரசநகரி சையது அபுதாஹிர். மாவட்ட வர்த்தகரணி செயலாளர் அப்பாஸ். மாவட்ட தொழில் நுட்ப அணிச் செயலாளர் அப்துல் ஜமீன் அறந்தாங்கி நகர அவைத்தலைவர் அப்துல் ஹமீது அறந்தாங்கி ஒன்றிய செயலாளர் அப்துல் முத்தலிப் ஆகியோர் உள்ளிட்ட மனிதநேய ஜனநாயக கட்சியின் செயல்வீரர்கள் கலந்துக்கொண்டனர் தகவல் ; தகவல் தொழில்நுட்ப அணி , மனிதநேய ஜனநாயக கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம் #MJK_IT_WING 06.05.2017
மஜக விழுப்புரம் மாவட்டம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்பாட்டம்.
விழுப்புரம்.ஜுன்.04., மாடு, எருது, ஒட்டகங்களை, இறைச்சிக்காகவும், விற்பனைக்காகவும் தடை விதித்த மத்திய பாசிச மோடி தலைமையிலான பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்பாட்டம். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று 04/06/17 ஞாயிற்று கிழமை 10-மணியளவில் மிக சிறப்பாக நடைபெற்றது. விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் A.M.இப்ராஹிம் தலைமை தாங்கினார், விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் S.முகம்மதுஅலி முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளர்கள். எஸ்.எஸ்.ஹாருன் ரசீது M.com மாநில பொருளாளர் - மஜக குடந்தை அரசன் நிறுவனர் - விடுதலை தமிழ்புலிகள் கட்சி. அ.வ.அப்துல்நாசர் Ex.MLA தலைமை செயற்குழு உறுப்பினர் - தமஜக வழக்கறிஞர். தி.ச.திருமார்பன் மாநில அமைப்பு செயலாளர் - விசிக கடலூர் மன்சூர் தலைமை கழக பேச்சாளர் - மஜக ஆகியோர் மத்திய பாசிச மோடி அரசிற்கு எதிராக அவர்களின் கண்டனங்களை பதிவுசெய்தனர். இந்த கண்டன ஆர்பாட்டதிற்கு விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், பகுதி நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர். தகவல்; தகவல் தொழில்நுட்ப அணி, மனிதநேய ஜனநாயக கட்சி. விழுப்புரம் மாவட்டம். #MJK_IT_WING 04.06.2017
கடலூரில் தபால் நிலையத்திற்கு பூட்டு… மஜக மாநில பொருளாளர் கைது…
கடலூர்.ஜூன்.03., இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் மாவட்டம் சார்பில் மாடுகள், ஒட்டகங்கள் இறைச்சிக்காக விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்த மத்தியில் ஆளும் பாசிச பாஜக அரசை கண்டித்து கடலூர் தபால் நிலையம் முற்றுகையிட்டு பூட்டு போடும் போராட்டம் மற்றும் சட்ட நகல் எரிக்கும் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் மஜக மாநில பொருளாளர் SS.ஹாரூன் ரசீது M.com தலைமையில் நடைபெற்றது. மிருகவதை தடை சட்டத்தில் திருத்தம் செய்யக்கோரியும், இறைச்சிக்காக மாடுகள், ஒட்டகங்கள் விற்க்கப்படுவதில் கட்டுப்பாடுகள் விதித்ததை மத்திய அரசு திரும்பப்பெறக் கோரியும், சென்னை IIT மாணவன் சூராஜ் தாக்கப்பட்டத்தை கண்டித்தும், சூராஜ்ஜை தாக்கிய ABVP குண்டர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கோரியும் இப்போராட்டத்தில் கடலூர் மஜக மாவட்ட செயலாளர் N.இப்ராஹிம், மாநில செயற்குழு உறுப்பினர் P.ஷாஜஹான், மாநில தலைமை கழக பேச்சாளர் கடலூர் மன்சூர், மாவட்ட துணை செயலாளர்கள் அஜ்மீர்கான், அஜிஸ், மாவட்ட மாணவர் இந்தியா செயலாளர் ரியாஸ் ரஹ்மான், இளைஞரணி துணை செயலாளர் மன்சூர், மாவட்ட மீணவரணி செயலாளர் சேட், கடலூர் நகர செயலாளர் இலியாஸ், மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிராஜ், நெய்வேலி நகர