ஏப்.30., நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியின் அதிமுக கூட்டணியின் மனிதநேய ஜனநாயக கட்சியின் வெற்றி வேட்பாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருடன் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயபால், நாகை பாராளுமன்ற உறுப்பினர் கோபால், நாகை தெற்கு மாவட்ட மஜக துணை செயலாளர் யூசுப்தீன், மாவட்ட வர்த்தக அணி செயலாளர் பிஸ்மி யூசுப் மற்றும் மஜக , அதிமுக தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டு வாக்கு சேகரித்தனர். -மஜக ஊடகப் பிரிவு
Author: admin
மஜகவின் வெற்றி வேட்ப்பாளர்கள் S.S.ஹாரூன் ரஷீத் மற்றும் M.தமிமுன் அன்சாரி ஆகியோறது வேட்ப்பு மனு ஏற்பு…
நாகை தொகுதியின் பிரச்சாரப் புகைப்படங்கள்…
மஜக வேட்பாளர்கள் இன்று வேட்ப்பு மனு தாக்கல்…
ஏப்.28.,மனிதநேய ஜனநாயக கட்சி போட்டியிடும் இரண்டு தொகுதிகளான வேலூர் மற்றும் நாகப்பட்டினத்தில் இன்று(28-04-2016) வேட்ப்பு மனு தாக்கல் செய்தனர். இதில் வேலூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மஜகவின் மாநில பொருளாளர் S.S.ஹாருன் ரஷீத் அவர்கள் வேலுரிலும், நாகப்பட்டினம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் நமது வெற்றி வேட்பாளர் மஜகவின் மாநில பொதுச்செயலாளர் M. தமீமுன் அன்சாரி அவர்கள் நாகப்பட்டினத்திலும் வேட்ப்புமனுவை தாக்கல் செய்தனர். உடன் கூட்டணி கட்சி நிர்வாகிகள்,தொண்டர்கள், மஜகவின் மாநில, மாவட்ட, ஒன்றிய, கிளைகழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமாக கலந்துகொண்டனர். தகவல் : மஜக ஊடகப்பிரிவு