வேலூர்: பிப்.16., மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக எதிர்வரும் பிப்.29 அன்று "கோவையில்" தமிழகம் தழுவிய அளவில் மக்கள் ஒன்று கூடும் வாழ்வுரிமை மாநாடு குறித்து, வேலூர் திருவண்ணாமலை, திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வட மேற்கு மண்டல ஆலோசனை கூட்டம் வேலூர் மாவட்டச் செயலாளர் முஹம்மத் யாசின் தலைமையில் நடைபெற்றது. இதில் மஜக அவைத்தலைவர் S.S.நாசர் உமரி, இணை பொதுச் செயலாளர் J.S.ரிபாய், மாநில துணைச் செயலாளர் S.G.அப்சர் சையத் ஆகியோர் பிப்ரவரி 29-ஆம் தேதி கோவையில் நடைபெறவுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிரான வாழ்வுரிமை மாநாட்டு பணிகள் குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினார்கள். மேலும் வேலூர் மாநாகர நிர்வாக கட்டமைப்பும் புதியதாக அமைக்கப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #வேலூர்_மாவட்டம் 16.02.2020
You are here
Home > Posts tagged "மஜக வட மேற்கு மண்டல"