பிப்.08., மத்திய அரசின் பாரபட்ச குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து ஈரோட்டில் அனைத்து கூட்டமைப்பு சார்பில் இரண்டாம் கட்டமாக தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் மவுலானா உமர் பாரூக், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணைச் செயலாளர் பாபு சாகின்ஷா, திமுக சார்பில் கொள்கை பரப்பு துணை செயலாளர் சந்திரகுமார், காங்கிரஸ் கட்சி சார்பில் மக்கள் ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ரகுராமன், மமக மாநிலச் செயலாளர் சாதிக், SDPI மாநில பொருளாளர் அபுதாகிா்,விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மண்டல அமைப்புச் செயலாளர் விநாயகமூர்த்தி, உள்ளிட்ட அரசியல் கட்சி மற்றும் முற்போக்கு இயக்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டனர். கலைமகள் கல்வி நிலையம் முதல் வ உ சி பூங்கா வரை நடைப்பெற்ற இப்பேரணியில் பெண்கள், குழந்தைகள், உள்பட ஆயிரக்கணக்கானோர் தேசிய கொடிகளுடன் கலந்து கொண்டனர் மேலும் 600அடி நீளமுள்ள பிரம்மாண்ட தேசிய கொடியுடன் பேரணி சென்றது அங்கு கூடிய பொதுமக்களுக்கு உற்சாக மூட்டியது நான்கு கிலோ மீட்டர் வரை தொடர்ந்த இப்பேரணி அமைதியான முறையில் சென்றது. இறுதியில் வ உ சி
You are here
Home > Posts tagged "தேசம் காக்கும் ஒற்றுமை பேரணி"