சிவகங்கை.டிச.14.., மத்திய அரசு நிறைவேற்றியுள்ள புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்து ஈழத் தமிழர்கள், அண்டை நாடுகளிலிருந்து வரும் இந்திய வம்சாவளி முஸ்லிம்கள், நேபாளத்திலிருந்து வரும் கிறித்தவர்கள் உள்ளிட்டவர்களையும் புதிய குடியுரிமை சட்டத்தில் குடியுரிமை வழங்க வேண்டும் என்ற முழக்கங்களுடன், தமிழகம் முழுவதும் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது, அதன் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் பேருந்து நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நகரச் செயலாளர் சையது முகமது, மாவட்ட வர்த்தகம் அணி துணைச் செயலாளர் ராயல் ஜாபர் அலி, வருசை முகமது, முகமது ரசீத், அப்துல் மஜித், உதுமான் அலி, அப்பாஸ் மற்றும் தொண்டர்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். தகவல்;- #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சிவகங்கை_மாவட்டம் 13-12-2019
You are here
Home > Posts tagged "திருப்புத்தூரில் புதிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யக் கோரி..! மஜக ஆர்ப்பாட்டம்"