பிப்.16., மத்திய அரசு கொண்டு வந்துள்ள கறுப்புச் சட்டங்களான CAA, NRC, NPR, ஆகியவற்றை எதிர்த்து மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் ஈரோடு மாவட்டம் அந்தியூரில் சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் எஸ்.எஸ்.ஹாருண் ரஷீது , அவர்கள் பங்கேற்று குடியுரிமை சட்டத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து உரையாற்றினார். மனிதநேய ஜனநாயக கட்சியின் துணை பொதுச்செயலாளர் சையது அஹமது பாருக், அவர்கள் கருத்துரையாற்றினார். இதில் அனைத்து கட்சி, மற்றும் சமூக, அமைப்புகளை சேர்ந்த தலைவர்கள், ஜமாத் நிர்வாகிகள், பங்கேற்று உரையாற்றினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஈரோடு மேற்கு மாட்ட செயலாளர் அந்தியூர் ஷானவாஸ், தலைமை செயற்குழு உறுப்பிர் ஈரோடு எக்ஸான், கோவை மாவட்ட துணை செயலாளர் ABT.பாருக், மாணவர் இந்தியா மாவட்ட செயலாளர் அப்பாஸ், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் ஷபி, மற்றும் மாவட்ட, நகர, கிளை, நிர்வாகிகள் பங்கேற்றனர். கருத்தரங்கில் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடுமேற்குமாவட்டம் 15.02.2020
You are here
Home > Posts tagged "எஸ்எஸ்ஹாருண்ரஷீது"