மார்ச்.30., ஐக்கிய அரபு அமீரக மண்டலம், மனிதநேய ஜனநாயக கட்சியின் அயலக பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) துபாய் மாநகரம் சார்பாக இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி துபாய் Hor_al_anz பகுதியில் உள்ள Annaporana உணவகத்தில் நடைபெற்றது. இது மனிதநேய சொந்தங்களுக்காக நடைபெற்ற ஒன்று கூடல் என்பது குறிப்பிடத்தக்கது இந்நிகழ்வினை துபாய் மாநகரச் செயலாளர் லால்பேட்டை V.ஷபிக்குர் ரஹ்மான் அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார். துபாய் மாநகர துணைச் செயலாளர் நாச்சிகுளம் யாசிர், அவர்கள் வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் துபாய் மாநகர துணைச் செயலாளர்கள் நாச்சிகுளம் ரசீது மற்றும் சித்திக் முன்னிலை வகித்தனர். மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக மனிதநேய ஜனநாயக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் மதுக்கூர் K.ராவுத்தர்ஷா, மற்றும் மாநில துணைச் செயலாளர் நாட்டாமை யூசுப் ராஜா ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். அமீரக செயலாளர் ARY அப்துல் ரெஜாக் வாழ்த்துரை வழங்கினார். மேலும் அமீரக பொருளாளர் Z.பாயஸ் அஹம்மது, அமீரக IT wing செயலாளர் தோப்பு துறை ஜியாவுல் ஹக், அமீரக வர்த்தக அணி செயலாளர் பிலால் அஹமத், அமீரக இளைஞரணி செயலாளர் வடகரை சலீம், துணைச் செயலாளர் மதுரை