நெல்லையில்… பாலஸ்தீன ஆதரவு நாள் முழக்கம்! மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்…

ஏப்ரல்.05.,

இன்று சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரித்து உலகமெங்கும் அல்குத்ஸ் தினம் என்ற பெயரில் பேரணிகள், ஆர்ப்பாட்டங்கள், கருத்தரங்குகள் நடைபெற்று வருகின்றது.

தமிழநாட்டில் இதனை ‘பாலஸ்தீன ஆதரவு நாள்’ என மனிதநேய ஜனநாயக கட்சி கடைப்பிடிக்கும் என தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.

இன்று மஜக-வினர், ‘இஸ்ரேலிய ஆக்ரமிப்பை எதிர்ப்போம்: சுதந்திர பாலஸ்தீனத்தை ஆதரிப்போம்’ என்ற பதாகை ஏந்தி வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

பல இடங்களில் கூட்டமாக குழுமி பதாகை ஏந்தி பாலஸ்தீன ஆதரவு முழக்கங்களையும் எழுப்பி, அதை வலைதளங்களில் பதிவிட்டு ஆர்ப்பரித்து வருகின்றனர்.

இன்று நெல்லை – ஜங்சன் – பெரிய பள்ளி அருகில் பாலஸ்தீன ஆதரவு நாளை முன்னிட்டு பதாகை ஏந்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டது.

இதில் மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி பங்கேற்றார்.

மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் நெல்லை. பிலால் அவர்கள் முழக்கங்களை எழுப்பினார்.

மாவட்டச் செயலாளர் பாளை. பாரூக்,
திருநெல்வேலி பெரிய பள்ளிவாசல் தலைவர். நியாமத்துல்லாஹ், செயலாளர் ஹாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மனிதநேய ஜனநாயக கட்சி மாவட்ட பொருளாளர் முகம்மது அலி, துணை செயலாளர் முருகேசன், 50 வார்டு முகம்மது இஸ்மாயில், இளைஞரணி பால் சேக், பத்தமடை செய்யது, பாளை பகுதி காஜா, மேலப்பாளையம் சேக் உசேன் மற்றும் ஜமாத்தார்களும் முக்கியஸ்தர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்:
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#நெல்லை_மாவட்டம்
05.04.2024.