சூடாகும் திருச்சி முற்றுகை களம்

சென்னை மண்டலத்திலிருந்து 100 வேன்களில் புறப்பட தீர்மானம்….

எழுச்சியுடன் நடைபெற்ற சென்னை மண்டல மஜக ஆலோசனை கூட்டத்தில் முடிவு…

ஜனவரி.08.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மாநிலச் செயலாளர் பல்லாவரம். ஷஃபி தலைமையில் இன்று 08.01.2024 – திருவல்லிக்கேணியில் நடைபெற்றது

இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

1. முந்தைய பொதுக்குழு முடிவை அமல்படுத்தும் வகையில் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மு.தமிமுன் அன்சாரி அவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், அவரது தலைமையில் ஒன்றுபட்டு வலிமையுடன் செயல்படுவது என இக்கூட்டம் தீர்மானிக்கிறது.

2. கட்சியின் புதிய பொதுச் செயலாளராக மெளலா. நாசர், பொருளாளராக J.S. ரிஃபாயி, துணை தலைவராக மன்னை. செல்லச்சாமி, இணை பொதுச்செயலாளராக செய்யது முகம்மது ஃபாருக் ஆகியோரின் பணிகளுக்கு இக்கூட்டம் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

3. பிப்ரவரி 10, 2024 அன்று திருச்சி மத்திய சிறை முற்றுகைப் போராட்டத்திற்கு சென்னை மண்டலத்திலிருந்து 100 வேன்களில் மக்களை திரட்டிச்செல்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.

4. இப்பணிகளை விரிவாக மேற்கொள்ள மாவட்ட அளவில் செயல்வீரர் கூட்டங்களை நடத்துவது என்றும் தீர்மானிக்கப்படுகிறது.

5. சென்னை மண்டலத்திலிருந்து புதிதாக பதவி உயர்வு பெற்றிருக்கும்

மாநில துணைச் செயலாளர் நாசர்

மாநில இளைஞர் அணி செயலாளர் புதுமடம் ஃபைசல்

மனிதநேய ஜனநாயக வணிகர் சங்க (MJVS) மாநிலச்செயலாளர் பிஸ்மில்லா கான் ஆகியோருக்கு இம்மண்டல நிர்வாகிகள் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

மேலும் பகுதி வாரியாக களமிறங்கி கட்சி கிளைகளை உருவாக்குவது குறித்தும் பேசப்பட்டது.

3 மணி நேரம் நடைபெற்ற பயனுள்ள இந்நிகழ்வில் அனைவருக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது.

இது நிர்வாகிகளுக்கு உற்சாகத்தை தந்தது மட்டுமின்றி புது தெம்புடன் அவர்கள் களமாட புறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் மாநிலச் செயலாளர் இப்ராகிம், மாநில துணைச்செயலாளர்கள் அசாருதீன், பேரா. சலாம், S.M.நாசர், மாணவர் இந்தியா மாநிலத் தலைவர் பஷீர், தகவல் தொழில்நுட்ப அணி மாநில செயலாளர் தாரிக், மருத்துவ சேவை அணி மாநில செயலாளர் அப்துல் ரஹ்மான், மனிதநேய வணிகர் சங்க மாநில செயலாளர் பிஸ்மில்லா கான், MJTS மாநிலத் துணைச் செயலாளர் மாத்தூர் இப்ராஹிம், தலைமை செயற்குழு உறுப்பினர் அபுதாஹீர்

மேலும் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் அக்பர் உசேன், வடசென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் ஜாஃபர், வடசென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஹனிஃப், செங்கல்பட்டு மாவட்ட செயலாளர் ஜாகிர், தென் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பாலவாக்கம் காதர், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மீஞ்சூர் கமால், மாவட்ட பொருளாளர்கள் நிஜாம், பாலவாக்கம் அலி, அப்ரார் உள்ளிட்ட மாவட்ட நிர்வாகிகள் துணை நிர்வாகிகள், அணி செயலாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தலைமையகம்
08.01.2024