எபிஜே விஐபி 2022 விருது வழங்கும் விழாவில் மஜகவிற்கு விருது.!

ஏப்.03., இந்தியாவில் தமிழகம் சிவகாசி மாவட்டத்தை தலைமையிடமாக கொண்டு செயல்படும் எ.பி.ஜே குரூப் ஆப் கம்பெனிஸ், எபிஜே டைனமிக் பவுண்டேஷனின் மக்கள் சேவையில் சிறப்பாக செயல்படும் சமூக செயல்பாடு செயற்பாட்டாளர்களுக்கு “இந்தியாவின் சிறந்த எபிஜே விஐபி 2022 விருது “வழங்கும் விழா புதுச்சேரியில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவையினை பாராட்டி விருதுநகர் மாவட்ட செயலாளர் திரு.I.கண்மணி காதர் அவர்களுக்கு இந்தியாவின் சிறந்த தூதர் விருதை தலைமை நிர்வாக ஒருகிணைப்பாளர் திருமதி S.லட்சுமி பிரபா.M.A.Phd அவர்கள் வழங்கினார்கள்.

இதில் அந்நிறுவனத்தின் அதிகாரிகள், மற்றும் மருத்துவர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் உடனிருந்தனர்.

அதை தொடர்ந்து புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வர் திரு. N.ரெங்கசாமி அவர்களை மஜக வினர் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#விருதுநகர்_மாவட்டம்
03.04.2022

Top