73வது குடியரசு தின விழா! தூத்துக்குடியில் தேசிய கொடியேற்றி மரக்கன்று வழங்கிய மஜகவினர்!

ஜன:26., மனிதநேய ஜனநாயக கட்சி தூத்துக்குடி புறநகர் மாவட்டம் காயல்பட்டினத்தில் நாட்டின் 73 வது குடியரசு தின விழாவை முன்னிட்டு தேசிய கொடியேற்றி மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைப்பெற்றது.

இதில் மாவட்ட செயலாளர் முகமது நஜிப், அவர்கள் தேசியக் கொடியேற்றி ஜனநாயகத்தை பாதுகாப்போம் என்ற உறுதிமொழி முழக்கங்களை எழுப்பினார்.

மாவட்ட துணைச் செயலாளர் மீராசாகிப், அவர்கள் பொதுமக்களுக்கு மரக்கன்றுகள் வழங்கினார்.

இந்நிகழ்வில் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை செயலாளர் முஜிபு ரஹ்மான், காயல் நகர செயலாளர் இப்னு மாஜா, நகர பொருளாளர் மீரான், நகர துணைச் செயலாளர் சிக்கந்தர் பாஷா, நகர இளைஞரணி செயலாளர் அஃப்ரிடி, மற்றும் சித்திக், உள்ளிட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_புறநகர்_மாவட்டம்
26.01.2022