நெல்லையில் DYFI ஒருங்கிணைத்த மக்கள்கோரிக்கைக்கான தர்ணா போராட்டத்தில் மஜகவினர் பங்கேற்ப்பு.!


நெல்லை.ஜன.31

நெல்லை மாநகர் முழுவதும் சாலைகள் தோண்டபட்டு சீர் செய்யபடாமல் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் இருப்பதை கண்டுகொள்ளாத அதிகாரிகளை கண்டித்து DYFI அமைப்பின் ஒருங்கிணைப்பில் தர்ணா போராட்டம் நெல்லை டவுண் வாகையடிமுக்கில் நடைபெற்றது.

தர்ணாவில் நெல்லை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சியினர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மஜக நெல்லை மாவட்ட செயலாளர் நிஜாம் அவர்கள் கண்டன உரையாற்றினார்.

இப்போராட்டத்தில் மாவட்ட பொருளாளர் பேட்டை மூசா, கொள்கை விளக்க அணி செயலாளர் N.அப்பாஸ், மாநகர செயலாளர் பீர்முஹம்மது, மாநகர துணைசெயலாளர் சுல்தான் அலாவுதீன், பேட்டை நகர சம்சுதீன், ஆதிமூலம், மாரியப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட திரளானவர்கள் கலந்துகொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#MJK2021
#நெல்லை_மாவட்டம்
31-01-2021