டெல்லி விவசாயிகளுக்கு ஆதரவாக ஆளுநர் மாளிகை முற்றுகை..!மஜக மாநிலச்செயலாளர் தாஜூதின் உள்ளிட்ட மஜகவினர் பங்கேற்று கைது..!


சென்னை.டிச.18.,

மத்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் திருத்த சட்டங்களை திரும்ப பெற வேண்டும் என்று கோரி டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்தை ஆதரித்தும், புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக நடைபெற்றது.

முன்னதாக இப்போராட்டத்திற்கு மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு தெரிவித்து போராட்டத்திலும் பங்குபெறும் என்று பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அறிவித்திருந்தார்.

அதனடிப்படையில் இன்று நடைபெற்ற ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டத்தில் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜூதின் தலைமையில் மஜகவினர் திரளாக பங்கேற்றனர்.

P.R. பாண்டியன், விக்ரமராஜா உள்ளிட்ட அனைவரும் போராட்டத்தில் பங்கேற்று கைதாகினர்.

மாநில செயலாளர் நாச்சிக்குளம். தாஜூதீன் அவர்களுடன் மாநில துணை செயலாளர்கள் பல்லாவரம் ஷபி, சையத் அப்ஸர், மாநில இளைஞரணி செயலாளர் அசாருதீன், மாநில விவசாய அணி செயலாளர் பேராவூரணி.சலாம், மீனவரணி மாநில செயலாளர் பார்திபன், MJTS மாநில தலைவர் பம்மல் சலீம், மாணவர் இந்தியா பொருளாளர் பஷீர் அகமது ஆகியோரும் பங்கேற்று கைதாகினர்.

மேலும் தென்சென்னை (கி) மாவட்ட செயலாளர் அப்துல் கையூம், செங்கல்பட்டு வடக்கு மாவட்ட செயலாளர் அல்தாப் உட்பட மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட மனிதநேய சொந்தங்கள் பெரும் திரளாக கலந்துகொண்டு கைதாகினர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#தென்சென்னை_கிழக்கு_மாவட்டம்
18-12-2020