டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக திமுக நடத்திவரும் உண்ணாநிலை போராட்டத்தில் மஜக துணை பொதுச்செயலாளர் தைமிய்யா பங்கேற்பு..!


சென்னை.டிச.18.,

டெல்லியில் வேளாண் சட்டத்துக்கு எதிராக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்று வரும் உண்ணாநிலை போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கட்சியின் துணை பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா தலைமையில், மாநில செயலாளர் J.சீனிமுஹம்மது, மாநில துணைச் செயலாளர்கள் புதுமடம் அனீஸ், திருமங்கலம் ஷமீம் ஆகியோர் பங்கேற்று வருகின்றனர்.

மேலும் தென்சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் Z.முஹம்மது ஜியா, மத்திய சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் சாகுல் ஹமீது, தலைமை செயற்குழு உறுப்பினர் H.முஹம்மது கடாபி, தென்சென்னை மேற்கு மாவட்ட பொருளாளர் I.முஹம்மது இப்ராஹிம், மத்திய சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் நூருல்லாகான், தென் சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் S.சையத் ஜியாவுத்தீன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் J.அர்ஷத் ரஹ்மான், ஆயிரம் விளக்கு பகுதி செயலாளர் Z.முஹம்மது இப்ராஹிம் மற்றும் வில்லிவாக்கம் பகுதி, கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் திரளாக பங்கேற்று வருகின்றனர்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தென்சென்னை_மேற்கு_மாவட்டம்
18.12.2020