இளைஞர்களை ஈர்க்கும் மஜக! கன்னியாகுமரி மாவட்டத்தில் தன்னெழுச்சியாக மஜகவில் இணையும் இளைஞர்கள்.!


செப்:17.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின் பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரத்தில் இளைஞர்கள் தங்களை மஜகவில் இணைத்துக் கொண்டனர்.

நாகர்கோவில் மாநகர இளைஞரணி செயலாளர் சமீர், அவர்கள் தலைமையில் மாவட்டச் செயலாளர் பிஜ்ரூள் ஹபீஸ் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு மஜக உறுப்பினர் அட்டைகள் வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் ரூபிகர் அலி, மாவட்ட துணை செயலாளர் முஜிப் ரகுமான், மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் பாவலர் ரியாஸ், மாநகர செயலாளர் அமீர் கான், மாநகர துணை செயலாளர் அஷ்ரப் அலி, மாநகர பொருளாளர் ஐயப்பன், மாநகர தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் முகம்மது ஷாஜித், திருவிதாங்கோடு கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#நாகர்கோவில்_மாநகரம்
#கன்னியாகுமரி_மாவட்டம்.
16.09.2020