மஜக நெல்லை மாநகர் நிர்வாகிகள் காவல்துறை உதவி ஆணையருடன் சந்திப்பு!

மே.21.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் நெல்லை மாநகர நிர்வாகிகள் இன்று நெல்லை மாநகர காவல்துறை உதவி ஆணையரை சந்தித்தனர்.

இச்சந்திப்பின் போது எதிர்வரும் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு 22.5.2020 மற்றும் 23.5.2020 ஆகிய இரண்டு தினங்களுக்கு வியாபாரக்கடைகள் திறக்க இரவு பத்துமணி வரை நேரத்தை நீட்டித்து தரவும் மேலும் 23.5.2020 சனிக்கிழமை இரவு முழுவதும் இறைச்சிகடைகளை திறக்க அனுமதி கோரியும், மஜக மாநகரப் பொருளாளர் பேட்டை மூஸா தலைமையில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

மஜக-வினரின் அழைப்பை ஏற்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நெல்லை மாநகரச் செயலாளர் கரிசல் சுரேஷ் அவர்களும் உடனிருந்து மனு வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்சந்திப்பில் மஜக நெல்லை பகுதி பொருளாளர் N.அப்பாஸ், மேலப்பாளைய பகுதி செயலாளர் தமிம் அன்சாரி, மேலப்பாளைய பகுதி பொருளாளர் நாகூர் மீரான் ஆகியோர் பங்கேற்றனர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
#நெல்லை_மாவட்டம்
21-05-2020