மருத்துவர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் மு.தமிமுன் அன்சாரி MLA சந்திப்பு..!


விழுப்புரம்.பிப்.1..,

இன்று தைலாபுரத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களை கூட்டமைப்பு சார்பில் ஒருங்கினைப்பாளர் மன்சூர் காசிஃபி தலைமையில், பஷீர் ஹாஜியார், தர்வேஸ் ரஷாதி ஆகியோர் முன்னிலையில் தலைவர்கள் சந்தித்தனர்.

மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA, பேரா.ஜவாஹிருல்லா, S.M.பாக்கர், உள்ளிட்ட தலைவர்கள் இச்சந்திப்பில் இடம் பெற்றனர்.

மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டங்கள் தொடர்பாக, பாமக பொதுக்குழு எடுத்த தீர்மானத்திற்கு நன்றி கூறிய தலைவர்கள், இச்சட்டங்களின் அபாயங்களை விளக்கினர்.

பேரா.ஜவாஹிருல்லா அவர்கள் இது அனைவருக்கும் எதிரானது என்பதை கூறி, அது தொடர்பான விபரங்களை அவரிடம் விளக்கினார்.

தலைவர்கள் இதற்கு எதிராக நீங்கள் தான் குரல் கொடுக்க வேண்டும் என்றதும், நான் உங்களில் ஒருவன் என்றவர், நிச்சயம் இதற்காக குரல் கொடுப்பேன் என்றார்.

மேலும் நாம் எல்லோரும் ஒற்றுமையோடு வாழ்கிறோம். அதுபோலவே இனியும் வாழ்வோம் என்று டாக்டர் ஐயா அவர்கள் கூறி, தலைவர்களை உற்சாகப்படுத்தி அரவணைத்து பேசினார்..

பேரா.ஜவாஹிருல்லாஹ் அவர்கள் எல்லோரையும் அறிமுகப்படுத்தி, இவர் தான் மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி என்றதும், “இவர் எங்க (அதாவது பாமக) MLA என்று சிரித்து டாக்டர் கலகலப்பூட்டினார்.

இந்த கறுப்பு சட்டங்களுக்கு எதிராக மாநில அரசை நீங்கள் தான் பணிய வைக்க வேண்டும் என தலைவர்கள் கூறியதும், நிச்சயம் செய்வேன் என்று உறுதி கூறினார்.

இச்சந்திப்பு நம்பிக்கையும், உற்சாகமும் அளிப்பதாக பத்திரிக்கையாளர்களிடம் தலைவர்கள் கூறினர்.

முன்னதாக மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் டாக்டர் ராமதாஸ் ஐயா அவர்களுடன் தனியாக சந்தித்து 20 நிமிடங்கள் பேசினார்.

இருவரும் பழைய பாமக நினைவுகளை அசைப் போட்டனர். தடா எதிர்ப்பு, இட ஒதுக்கீடு மாநாடுகள் என பழைய பாமக போராட்டங்களை மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் நினைவூட்டி பேச, டாக்டர் ராமதாஸ் ஐயா மிகவும் உற்சாகம் ஆனார்.

அருகிலிருந்த பாமக தலைவர் ஜி.கே.மணி அவர்கள், தமிமுன் அன்சாரி அவர்கள் நமது எல்லா கோரிக்கைகளையும் சட்டமன்றத்தில் பேசுகிறார் என்றார்.

https://m.facebook.com/story.php?story_fbid=2249738211792608&id=700424783390633

பாமக-வின் சாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கையை மஜக முழுமையாக ஆதரிப்பதாக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறி, நடப்பு தேசிய அரசியல் நிகழ்வுகள் குறித்தும் பேசினார்.

அப்போது பாமக தலைவர் ஜி.கே. மணி, பேராசிரியர் தீரன், பாமக மாநில துணைத் தலைவர் கஸ்ஸாலி, பாமக பிரமுகர்கள் மன்சூர், ஷேக் அலி உள்ளிட்டோரும் உடனிருந்தனர்.

தகவல்,
#மஜகதகவல்தொழில்நுட்பஅணி
#MJK_IT_WING
#விழுப்புரம்_மாவட்டம்
01-02-2020