50 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்யும் பெரிய திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு சட்டம் - 2006 ன் விதிகள் அவசியமாகும். இப்போது அதற்கு ஆபத்து நேர்ந்திருக்கிறது. மத்திய பாஜக அரசு கொரோனா நெருக்கடி கால பலஹீனங்களை, தங்கள் ரகசிய திட்டங்களுக்கான வாய்ப்பாக பயன்படுத்தும் விதத்தில் பல்வேறு மக்கள் விரோத சட்டங்களை நிறைவேற்ற துடிக்கிறது. அதன்படி நடைமுறையில் உள்ள சுற்றுச் சூழல் சட்ட விதிமுறைகள் - 2006 ல் சில திருத்தங்களை செய்து ஏப்ரல் 11, 2020 மத்திய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. இதை 22 மொழிகளில் வெளியிட்டு, ஆகஸ்ட் 11, 2020 வரை பொதுமக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என இது தொடர்பான ஒரு வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. இதையும், கடந்த ஏப்ரல் மாதம் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.சந்திரசூட் அவர்கள் இது தொடர்பாக அளித்த தீர்ப்பையும் மத்திய அரசு கண்டுக்கொள்ளவில்லை. மத்திய அரசின் சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அறிக்கை - 2020 என்பது சூழலியல் நலன் சார்ந்த கட்டுப்பாடுகளை தளர்த்த வழி வகுக்குகிறது. இதனால் நீர் வளங்களும்,விவசாய நிலங்களும், மணல் திட்டுகளும், வனங்களும் பெரு நிறுவனங்களால் எளிதில் சூரையாடப்படும்
இஸ்லாமிய கலாச்சார பேரவை
ஊரடங்கில் உணவின்றி தவித்த ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்கிய மஜகவினர்!
ஜுலை.27., கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக தமிழகமெங்கும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் எதிரொலியாக மனிதநேய ஜனநாயக கட்சி கோவை மாநகர் மாவட்ட பொள்ளாச்சி நகரத்தின் சார்பில் சாலையோரத்தில் வசித்துவரும் ஆதரவற்ற மக்களுக்கு உணவு பொட்டலங்கள் பொள்ளாச்சி நகர செயலாளர் ராஜா ஜெமீஷா, அவர்கள் தலைமையில் வழங்கப்பட்டது. இதில் நகர துணை செயலாளர் அன்சார், நகர இளைஞரணி செயலாளர் அலாவுதீன், இளைஞரணி பொருளாளர் முஹம்மது இஸ்மாயில், இளைஞரணி துணை செயலாளர்கள் ராஜா, சௌக்கத், முகமது அலி, நகர தகவல் தொழில் நுட்ப அணி செயலாளர் ஹபீப் அன்சாரி, மருத்துவ அணி செயலாளர் ஜான்ஸ்கான்,15 வது வார்டு செயலாளர் அப்பாஸ், மற்றும் அஷ்ரப், அஜ்மல், சமீர் உள்ளிட்ட மஜக வினர்கள் கலந்து கொண்டு உணவு பொட்டலங்களை விநியோகம் செய்தனர். தகவல். #மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி #MJKITWING #பொள்ளாச்சி_நகரம் #கோவை_மாநகர்_மாவட்டம் 26/07/2020
MKP கத்தார் மண்டலம் சார்பாக தமிழகர்களை மீட்டு தயாகம் அனுப்பும் பணிகள் தீவிரம்!
ஜூலை.26., மனிதநேய ஜனநாயக கட்சியின் அயல்நாட்டு பிரிவான மனிதநேய கலாச்சாரப் பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக கத்தாரில் சிக்கி தவிக்கும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து விதமான உதவிகளையும் செய்து கொடுத்து தாயகம் அனுப்பி வைக்கும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக நேற்று "நான்காம் கட்டமாக" 11 தமிழர்கள் தாயகம் செல்வதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்து, அவர்களை விமான நிலையத்திற்கு அழைத்து வந்த கத்தார் மண்டல (MKP) நிர்வாகிகள், தாயகத்திற்கு அவர்களை வழியனுப்பி வைத்தனர். மேலும் தமிழகத்தில் மஜக சார்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விமான நிலைய சேவைக்குழுவை தொடர்பு கொண்ட கத்தார் மண்டல நிர்வாகிகள் அங்கு வரும் தமிழர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுக்கும் படி கேட்டுக்கொண்டனர். தகவல், #மனிதநேய_கலாச்சாரப்_பேரவை #MKP_IT_WING #கத்தார்_மண்டலம். 25/7/2020
BC, MBC, BCM மக்களின் இட ஒதுக்கீட்டு உரிமையை பறிக்காதே – சமூக வலைதள போராட்டத்தை மனிதநேய ஜனநாயக கட்சி ஆதரவு
நீலகிரியில் மஜகவில் இணைந்த இளைஞர்கள்!!
நீலகிரி:ஜூலை.25., மனிதநேய ஜனநாயக கட்சியின் தொடர் மக்கள் நலப்பணிகளால் ஈர்க்கப்பட்டு சேவை அரசியலின் பால் தமிழகம் முழுவதும் சாரை சாரையாக இளைஞர்கள், மாணவர்கள், உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் தன்னெழுச்சியாக மஜக வில் இணைந்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நீலகிரி கிழக்கு மாவட்டம் உதகையை சேர்ந்த இளைஞர்கள் தங்களை மஜக வில் இணைத்துக் கொண்டனர். நீலகிரி கிழக்கு மாவட்ட அமைப்புக் குழு நிர்வாகிகள் முன்னிலையில் புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்வில் அமைப்புக்குழு தலைவர் N. காலிப், மாணவர் இந்தியா மாநில செயலாளர் பெரியார் கார்த்திக்,T.கமாலுதீன், K.s. ஹமீத், T.ரிஸ்வான், A.தப்ரேஸ், மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல், #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நீலகிரி_கிழக்கு_மாவட்டம் 25/07/2020