மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து அலோசிக்க மஜக கடலூர் வடக்கு மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் மன்சூர் தலைமையில் நெய்வேலியில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை செயலாளரும், மாவட்ட மேலிட பொறுப்பளருமான நெய்வேலி இப்ராஹிம் அவர்கள் கலந்து கொண்டார். இதில் போராட்டம் குறித்து மாவட்டம் முழுவதும் 100 -க்கும் மேற்பட்ட இடங்களில் சுவர் விளம்பரங்களை துரிதமாக வரைவது என இலக்கு நிர்ணயித்து பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன. மேலும் மாவட்டம் முழுவதும் 5 பஸ் உட்பட 30-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மக்களை போராட்டத்திற்கு அழைத்து செல்வது என தீர்மானிக்கப்பட்டது. இதில் மாவட்ட பொருளாளர் ரியாஸ் ரகுமான், தலைமை செயற்குழு உறுப்பினர் நூர் முஹம்மத், மாவட்ட துணைச்செயலாளர்கள் அஜ்மீர் கான், பண்ருட்டி யாசின், மற்றும் ஒன்றிய மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #கடலூர்_வடக்கு_மாவட்டம் 19.12.2021
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
நாகை மாவட்டம் வேதை நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசனை கூட்டம் வேதை நகர அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மாவட்ட துணை செயலாளர் சேக் அகமதுல்லா அவர்கள் கலந்து கொண்டு ஆலோசனை வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்டத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இக்கூட்டத்தில் வேதை நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #நாகை_மாவட்டம் 19.12.2021
குடியாத்தம் நகர மஜக ஆயத்த ஆலோசனை கூட்டம்!
மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக ஜனவரி 8 அன்று "சாதி, மத வழக்கு பேதமின்றி 10 ஆண்டுகளை நிறைவு செய்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய கோரி" கோவை மத்திய சிறைச்சாலை முற்றுகை போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தின் ஆயத்த பணிகள் குறித்து ஆலோசிக்க வேலூர் மாவட்ட குடியாத்தம் நகர செயலாளர் எஸ்.அனீஸ் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக மாவட்ட இளைஞர் அணி பொருளாளர் S.M.நிஜாம்முத்தீன் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தில் நகரத்தின் சார்பாக முன்னெடுக்க வேண்டிய போராட்ட பரப்புரை பணிகள் குறித்தும், முற்றுகை போராட்டத்திற்கு திரளான மக்களை அழைத்து செல்வது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட தகவல் தொழில்நுட்ப செயலாளர் முபாரக் அஹ்மத் நகர து.செயலாளர் கவுஸ் பாஷா,நகர,மருத்துவ சேவை அணி செயலாளர்கள் சாதிக்.முஹம்மத் உசேன், மாணவர் இந்தியா நகர செயலாளர் ஜிஷான் மற்றும் நகர கிளை நிர்வாகிகள் ஆகியோர் பங்கேற்றனர் #கோவையில்_திரள்வோம் #நீதியை_வெல்வோம் #ReleaseLongTermPrisoners தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #வேலூர்_மாவட்டம் 19.12.2021
MKP கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்தத்தான முகாம்.!
கத்தார் தேசிய தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பு அமைப்பான மனிதநேய கலாச்சார பேரவை (MKP) கத்தார் மண்டலம் சார்பாக தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக மாபெரும் இரத்த தான முகாம் ஆசியன் டவுன் (சனயா பகுதி) மண்டல செயலாளர் ஆயங்குடி முஹம்மது யாசின் தலைமையில் (18-12-2021) அன்று மாலை நடைபெற்றது. கத்தாரிலுள்ள இந்திய தூதரகத்தின் கிளை அமைப்பான ICC நிர்வாகி திரு அனிஷ் அவர்கள் இரத்ததான முகாமை துவக்கிவைத்தார். நிகழ்விற்கு சிறப்பு அழைப்பாளராக ICC தலைவர் திரு.பாபுராஜன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார், QMF கத்தார் தலைவர் கடலூர் முஸ்தஃபா, ஐக்கிய தமிழ் மன்ற ( UTF ) ஒருங்கிணைப்பாளர் நாசர், கத்தார் சஹாபாக்கள் நூலக நிர்வாகிகள், ஒருங்கிணைந்த தமிழர் பேரவை நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர் இந்நிகழ்ச்சியில் தலைமை செயற்குழு உறுப்பினர் கீழக்கரை ஹூசைன் அவர்கள் MKP கத்தார் மண்டல நிர்வாகம் சார்பாக 2022 ஆண்டிற்கான காலண்டரை வெளியீடு செய்தார். இம்முகாமில் 120-க்கும் மேற்பட்டோர் இரத்ததானம் செய்தனர் என்பது குறிப்பிடதக்கது. இந்நிகழ்வில் மஜக தலைமை செயற்குழு உறுப்பினர் உத்தமபாளையம் உவைஸ், மண்டல பொருளாளர் திருப்பத்தூர் நிசார் அஹமது, மண்டல துனைச் செயளாலர்கள்
அழைப்பிதழ் பணிகள் தொடக்கம்… மஜக பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி பொதக்குடியில் தொடங்கி வைத்தார்…
ஜனவரி 8, கோவை சிறை முற்றுகை போராட்டத்தை அறிவித்தது முதல் மஜக வை சுற்றி மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பல தரப்பட்ட மக்களும் தன்னெழுச்சியாக கோவையை நோக்கி புறப்பட தயாராகி வரும் செய்திகள் போராட்டக் குழுவுக்கு பெரும் உற்சாகத்தை அளித்து வருகிறது. பல்வேறு சமூக தலைவர்கள், மனித உரிமை ஆர்வலர்கள், கல்வியாளர்கள், சமூக சேவர்கள், அறிஞர்கள், ஜமாத் தலைவர்கள், இமாம்கள் ஆகியோருக்கு முறைப்படி அழைப்பு விடுக்கப்பட உள்ளது. இன்று அழைப்பிதழ் கொடுக்கும் பணியை திருவாரூர் மாவட்டம் பொதக்குடியில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி தொடங்கி வைத்தார். ஜனவரி 8, கோவை சிறை முற்றுகைக்கான அழைப்பிதழை திருவாரூர் மாவட்ட ஐக்கிய ஜமாத் செயலாளர் ஜனாப். ரபியுதீன் அவர்களிடமும், பொதக்குடி அனைத்து ஐமாத் தலைவர் ஜனாப் A.S. மகம்மூது மெய்தீன் அவர்களிடமும் பொதுச் செயலாளர் நேரில் வழங்கினார். பெருமளவில் ஜமாத்தார்கள் இதில் பங்கேற்க வேண்டும் எனவும், ஜனவரி 7 வெள்ளி அன்று ஜும்மா விலும் அறிவிப்பு செய்ய வேண்டும் என்றும் பொதுச் செயலாளர் கேட்டுக் கொண்டார். இந்நிகழ்வில் மாநிலத் துணைச் செயலாளர் நாகை முபாரக், மாவட்டச் செயலாளர் சீனி ஜெகபர் சாதிக்,,