திருப்பூரில் இளைஞரணி ஆலோசனை கூட்டம்.!

திருப்பூர்.ஆக.13., திருப்பூர் மாவட்ட இளைஞரணி ஆலோசனைக் கூட்டம் நேற்று இரவு மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது .

இந்த கூட்டத்திற்கு இளைஞரணி மாவட்ட செயலாளர் அஸாருதீன் தலைமை தாங்கினார் இளைஞரணி மாவட்ட பொருளாளர் மன்சூர் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளர்களாக
மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மாவட்ட பொருளாளர் முஸ்தாக் அகமது மாவட்ட துணைச் செயலாளர்கள் லியாகத் அலி. அக்பர் அலி.ராயல் பாஷா.
தலைமை செயற்குழு உறுப்பினர் இக்பால் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆலோசனை கூட்டத்தில் திருப்பூர் மாவட்ட இளைஞரணி சார்பாக மிக வேகமாக கட்சிப் பணிகளில் கவனம் செலுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

மேலும் எதிர்வரும் 19-08-2018 ஞாயிற்றுக்கிழமை சிராஜ் மஹாலில் நடைபெறும் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்திற்கு சிறப்பான ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும்,
அடுத்த மாதம் மஜக பொதுச் செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA உள்ளிட்ட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கு பெறும் மாபெரும் சமூக நல்லிணக்க பொதுக்கூட்டத்திற்கு சிறப்பான பங்களிப்பை செலுத்துவதென தீர்மானிக்கப்பட்டது.

அப்போது மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் காலேஜ் ரோடு பகுதியை சார்ந்த இளைஞர்கள்
தங்களை மனிதநேய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தின் முடிவில் இளைஞரணி மாவட்ட துணைச் செயலாளர் சலீம் பாய் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

தகவல்
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJK_IT_WING
திருப்பூர்_மாவட்டம்
14-08-2018