பிப்.17, மனிதநேய ஜனநாயக கட்சியின் கடலூர் வடக்கு, தஞ்சை வடக்கு ஆகிய மாவட்டங்களில் பிப்.29, வாழ்வுரிமை மாநாட்டிற்கான சிறப்பு ஆலோசனைக் கூட்டங்கள் நடைப்பெற்றுள்ளன. தஞ்சை வடக்கில் மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் ஹ.ஷேக் முஹம்மது அப்துல்லாஹ் தலைமையில் மு.நிர்வாகிகள் முஹம்மது மஃரூப், முஹம்மது இக்பால் சேட் ஆகியோர் முன்னிலையில் குடந்தையிலும், கடலூர் வடக்கில் மஜக மாவட்ட செயலாளர் கா.முஹம்மது யூசுப் தலைமையில் மா.து செயலாளர்கள் பண்ருட்டி யாசீன், A.ரியாஸ் ரஹ்மான் ஆகியோர் முன்னிலையில் நெல்லிக்குப்பத்திலும் நடைப்பெற்றது. குடந்தையில் இணைப் பொதுச் செயலாளர் JS ரிபாயி, மாநில செயலாளர் H.ராசுதீன், மாநில கொள்கை விளக்க அணி துணைச் செயலாளர் A.காதர் பாட்ஷா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்றனர். நெல்லிக்குப்பத்தில் மாநில துணைச் செயலாளர் நெய்வேலி இப்ராஹிம் கலந்து கொண்டார். இக்கூட்டங்களில் தஞ்சை (வ) மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் முகம்மது யாஸீன், இப்ராஹீம்ஷா, ஆசாத் மற்றும் கடலூர் (வ) IKP மாவட்ட செயலாளர் Z.அப்துல் பாஸீத் உள்ளிட்ட மாவட்ட துணை, அணி, ஒன்றிய, நகர நிர்வாகிகள் திரளாக பங்கேற்றனர். தகவல் ; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJKitWING #கிழக்கு_மண்டலம்
You are here
Home > Posts tagged "மஜகமாநிலநிர்வாகிகள்_பங்கேற்பு!"