சென்னை.பிப்.16.., அனைத்து இஸ்லாமிய கட்சி மற்றும் அமைமைப்புகளின் கூட்டமைப்பு சார்பாக இன்று சென்னை மண்ணடியில் கூட்டமைப்பு தலைவர் காஜா மொய்தீன் ஹஜ்ரத் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மாநில துணைப் பொதுச் செயலாளர் N.A.தைமிய்யா மற்றும் தகவல் தொழில்நுட்ப அணி மாநில துணைச் செயலாளர் தாம்பரம் தாரிக் ஆகியோர் பங்கேற்றனர். இக்கூட்டத்தில் தமிழகத்தில் நிலவும் போராட்ட சூழல் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. மேலும் கூட்டமைப்பு சார்பாக எதிர்வரும் 19-02-2020 புதன்கிழமை அன்று சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சட்டமன்றத்தை முற்றுகை போராட்டம், மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டது. பின்னர், சென்னை காவல் ஆணையர் A.K.விஸ்வநாத் அவர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகளை நேரில் சந்திக்க வேண்டும் என்று தெரவித்ததின் அடிப்படையில், கூட்டமைப்புத் தலைவர்கள் சென்னை மாநகர காவல் ஆணையரை சந்தித்தனர். கூட்டமைப்புடைய முடிவுகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தகவல்; #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #சென்னை 15-02-2020
You are here
Home > Posts tagged "கூட்டமைப்புஆலோசனைக்கூட்டம் #மஜக_பங்கேற்பு..!"