பிப்.20., குடியுரிமை சட்டத்திருத்தத்தை கண்டித்தும் அதை அமல்படுத்தமாட்டோம் என தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றக் கோரியும் ஈரோடு மாவட்ட அனைத்துக் கூட்டமைப்புகள் சார்பில்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சையது அஹமது பாருக், மாநில துணை செயலாளர் பாபுஷாஹின்சா, ஆகியோர் பங்கேற்று எழுச்சியுரை நிகழ்த்தினர். இப்போராட்டத்தில் அனைத்து சமூக அமைப்புகள், மற்றும் கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் பங்கேற்று உரையாற்றினர். இப்போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று மத்திய மாநில அரசுகளுக் கெதிராக பேரணியாக திரண்டு கோஷமிட்டவாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி முன்னேறினர். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் ஷபீக்அலி, மாவட்ட பொருளாளர் முகமது அலி, ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், தலைமை செயற்குழு உறுப்பினர் எக்சான், மாவட்ட துணை செயலாளர்கள் பாபு, பக்கீர் முகம்மது, குளம் முஸ்தபா, மற்றும் மாவட்ட, நகர, பகுதி, கிளை, நிர்வாகிகள் உறுப்பினர்கள் திரளானோர் பங்கேற்றனர். தகவல் #மஜகதகவல்தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #ஈரோடு_மாவட்டம் 19.02.2020
You are here
Home > Posts tagged "ஆயிரக்கணக்காணோர்_திரண்டனர்!!"