தமிழ்நாடு பள்ளிவாசல் ஜமாத் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் சிக்கந்தர், அடையாறு பள்ளி தலைவர் சதுதீன் பாகவி, மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA, தொல். திருமாவளவன், முஸ்லீம் லீக் துணைத் தலைவர் அப்துல் ரஹ்மான் Ex.MP, ஹாரூண் Ex.MP, பீட்டர் அல்போன்ஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் உரையின் சுருக்கம் பின்வருமாறு: வர்தா புயலால் இந்த போராட்டம் நடக்குமா? என நினைத்தோம். இறைவனின் நாட்டத்தால் இது நடக்கிறது. புயல் பேருந்துகளை புரட்டிப் போடலாம். நூற்றுக்கணக்கான மரங்களை வேரோடு பிடுங்கி எரியலாம். அது நமது ஈமானை புரட்டிப் போட முடியாது. அதனால்தான் இவ்வளவு நெருக்கடியிலும் கூட்டம் திரண்டுள்ளது. 3 நாட்களாக மொபைல் போன்கள் வேலை செய்யவில்லை. யாரும் யாரையும் தொடர்புக் கொள்ள முடியவில்லை. வாகனங்கள் கிடைக்கவில்லை. அப்படி இருந்தும் ஷரியத்திற்காக மக்கள் திரண்டு இருக்கிறார்கள். இது போன்ற எழுச்சிதான் மோடியின் அரசியலுக்கு வீழ்ச்சியை ஏற்படுத்தும். மோடியால் பொதுசிவில் சட்டத்தை கொண்டு வரமுடியாது. RSSன் வழிகாட்டி கோல்வால்கர் 1972 ஆம் ஆண்டு டெல்லியில்
மஜக போராட்டங்கள்
மஜக போராட்டங்கள்
பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக சேலத்தில் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்…
கடந்த ( 1.12.16 )அன்று சேலத்தில் கொட்டும் மழையில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்றனர். ஜமாத்துல் உலமா நடத்திய இந்நிகழ்ச்சியில் உலமாக்களுடன், மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA,பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் சிக்கந்தர், SDPI தலைவர் தெஹ்லான் பாகவி, முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் அபுபக்கர் MLA, INTJ தலைவர் S.M பாக்கர், தேசிய லீக் பொதுச்செயலாளர் M.G.K நிஜாமுதீன், ஜாக் துணை பொதுச்செயலாளர் முகைதீன் பக்ரி உள்ளிட்டோர் உரையாற்றினர். தகவல் : மஜக ஊடகப் பிரிவு சேலம்.
திண்டுக்கல்லில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பரிப்பு !
திண்டுக்கல்லில் ஜமாத்துல் உலமாவின் ஒருங்கிணைப்பில் அனைத்து இயக்க கூட்டமைப்பு சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மஜக பொதுச்செயலாளர் M. தமிமுன் அன்சாரி MLA, கலந்துக் கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன உரையாற்றினார். அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜீதீன், மாநில துணைச் செயலாளர் திண்டுக்கல் அன்சாரி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான மஜகவினரும் பங்கேற்றனர். பலவேறு சமூகங்களை சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். தகவல்: மஜக ஊடகப் பிரிவு திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்.
அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு சார்பாக பொதுசிவில் சட்ட விளக்க பொதுக்கூட்டம் மஜக பொருளாலர் பங்கேற்பு!
திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில் 8.11.16 அன்று மாலை ஆவடி பெரு நகராட்சி அனைத்து பள்ளிவாசல் சார்பாக மத்திய அரசு கொண்டு வர நினைக்கும் பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது கூட்டம் நடை பெற்றது. இப்பொது கூட்டத்தில் மனிதநேய ஜனநாயக கட்சியின் மாநில பொருளாளர் S.S.ஹாரூண் ரஷீத், காங்கிரஸ் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் Ex.mp, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுச்செயலாளர் K.A.M.அபுபக்கர் M.L.A, இந்திய தவ்ஹீத் ஜமாத் மாநில தலைவர் S.M.பாக்கர், S.D.P.I.மாநில தலைவர் தெஹ்லான் பாஃகவி, மனிதநேய மக்கள் கட்சி பொதுச் செயலாளர் P.அப்துல் சமத், சமூக ஆர்வலர் S.மசூதா ஆலிமா ஆகியோர் கலந்து கொண்டனர். இப்பொது கூட்டத்திற்கு அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு செயலாளர் A.ஹம்சா தலைமை வகித்தார். அனைத்து பள்ளிவாசல் கூட்டமைப்பு தலைவர் ஹாஜி.S.சர்புதீன் முன்னிலை வகித்தார் . தகவல்: மஜக ஊடக பிரிவு திருவள்ளூர் மாவட்டம்.
ஈரோடு மாநகர் மாவட்டம் சார்பில் பொதுசிவில் சட்டத்திற்கு எதிராக மஜக நடத்தும் கையெழத்துப் போர் துவக்கம்…
ஈரோடு மாநகர் மாவட்டம், சுல்தான் பேட்டை பள்ளி வாசலில் பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசுக்கு எதிராக மனிதநேய ஜனநாயக கட்சி நடத்தும் கையெழத்துப் போர் 21.20.2016 முதல் 4.11.2016 வரை மக்களை சந்திப்போம் நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் A.ஷபிக் அலிதலைமை தாங்கி தொடங்கி வைத்தார் . மாவட்ட துணை செயலாளர் சாகுல் ஹமீது,முஸ்தபா மற்றும் மாவட்ட அரசு காஜி ஹாஜி கிபாயத்துல்லாஹ் பாகவி,பள்ளி இமாம் அப்துல் சமது ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் முகமது அலி வரவேற்புரையாற்றினார். நிகழ்ச்சியில் கிளை பொருப்பாளர்கள்,ஊர் ஜமாத்தார்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். இறுதியில் மாணவர் இந்தியா மாவட்ட செயலாலர் ஜாபர் நன்றி கூற நிகழ்ச்சி நிறைவுற்றது. தகவல்: மஜக ஊடகபிரிவு ஈரோடு மாநகர் மாவட்டம்