மார்ச்.27, இன்று மஜக தலைமையகத்திற்கு தமிழக கொங்கு இளைஞர் பேரவை தலைவர் உ.தனியரசு நல்லெண்ண வருகை தந்தார். சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து தலைவர் மு.தமிமுன் அன்சாரியுடன் கருத்துகளை பகிர்ந்து கொண்டார். பின்னர் மஜக தலைமையகத்தில் தினமும் நடைபெறும் நோன்பு துறப்பு இஃப்தார் நிகழ்வில் பங்கேற்றார். அப்போது 'அத்தாட்சிகள்' திருக்குர்ஆன் கலைக்களஞ்சியம் என்ற நூலின் முதல் பாகத்தை தலைவர் வழங்க, அதை தனியரசு பெற்றுக் கொண்டார். சாஜிதா புக் சென்டர் வெளியிட்டுள்ள 4 பாகங்களை கொண்ட இந்நூல் தற்போது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. திருக்குர்ஆனின் உள்ளடக்கத்தை பல்வேறு தலைப்புகளில் அறிவியல், வரலாறு ஆகியவற்றுடன் ஒப்புமைப்படுத்தி இந்நூல் மிகப்பெரிய தாக்கத்தை தமிழ் நூலக உலகில் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. (நூல் பெற : 98409 7758- www. Sajithabook Centre.com ) தகவல் : #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJK_IT_WING #தலைமையகம் 27.03.2024.
Author: admin
கோவையெங்கும் மஜக கொடிகள்… வேட்புமனு தாக்கலில் கூட்டணி கட்சிகள் உற்சாகம்…
மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணியை ஆதரிப்பதாக (19.03.2024) அன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும், தமிழக முதலமைச்சருமான திரு. மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்த பின் மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்தார். இதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் மஜக-வினர் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று திமுக தலைமையிலான I.N.D.I.A. கூட்டணியின் கோவை நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் கணபதி ராஜ்குமார் அவர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். இதில் மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் கோவை மாநகர் மாவட்ட செயலாளர் M.H.அப்பாஸ் தலைமையில் மஜக-வினர் பங்கேற்றனர். திரும்பும் திசை எங்கும் மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடிகளுடன் தொண்டர்கள் ஆர்ப்பரித்தனர். இந்நிகழ்வில் அமைச்சர் T.R.B.ராஜா, திமுக மாவட்ட செயலாளர் கார்த்திக், மற்றும் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், மாநில இளைஞர் அணி பொருளாளர் PMA.பைசல், மாவட்ட துணைச் செயலாளர்கள் ஹனீபா, அன்வர் ,ஜாஃபர் சாதிக், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் சிராஜுதீன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் முஜிபுர் ரஹ்மான், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ஃபயாஸ், துணைச் செயலாளர்
அரசியலில் அனைவரின் கருத்துகளும் கூர்ந்து கவனிக்கப்படுகிறது
மஜக தலைமையக நியமன அறிவிப்பு..
முன்னாள் தம்மாம் மண்டல செயலாளராக பணியாற்றிய A.செய்யது அலி த/பெ; அபு பக்கர் (00966505952425) அவர்கள் தலைமை செயற்குழு உறுப்பினராக தலைவர் மு.தமிமுன் அன்சாரி அவர்களின் ஒப்புதலுடன் நியமனம் செய்யப்படுகிறார். சவுதி தம்மாம் நிர்வாகிகள் அவருக்கு நிர்வாக ரீதியாக முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவண், மெளலா M. நாசர் பொதுச் செயலாளர் மனித நேய ஜனநாயக கட்சி 27.03.2024.
கிருஷ்ணகிரி இந்தியா கூட்டணி வேட்பாளர் அறிமுக கூட்டம்… மஜக மாநில துணைச்செயலாளர் ஓசூர் நவ்ஷாத் பங்கேற்பு..
மார்ச்.27., எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான I.N.D.I.A கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி சூறாவளி தேர்தல் பரப்புரையில் ஈடுபடும் என்று தலைவர் மு.தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்கள். அதன்படி கிருஷ்ணகிரி நாடாளுமன்ற வேட்பாளர் திரு.K.கோபிநாத் அவர்களது வேட்பாளர் அறிமுக கூட்டம் ஓசூர் ஆனந்த் கிராண்ட் பேலஸில் நடைபெற்றது. கூட்டத்தில் பேசிய மாநில துணைச் செயலாளர் ஓசூர் நவ்ஷாத் எதிரணியில் நமக்கு வாய்ப்பு இருந்தும் கட்சி நலனை விட நாட்டு நலன் தான் முக்கியம் என இந்தியா கூட்டணிக்கு மஜக தலைவர் மு.தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்ததை குறிப்பிட்டு பேசி வேட்பாளர் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற மனிதநேய ஜனநாயக கட்சி தீவிர பிரச்சாரம் மேற்கொள்ளும் என்று பேசினார். இக்கூட்டத்தில் உணவு வழங்கல் துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக்கரபாணி, திமுக மாவட்ட செயலாளர் ஒய் பிரகாஷ் MLA, மாநகர செயலாளரும் மாநகர மேயருமான S.A. சத்யா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்ற உறுப்பினர் தோழர் ராமச்சந்திரன் MLA உட்பட கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் மஜக மாவட்ட செயலாளர் முஹம்மது உமர் மாவட்டத்