ஏப்.02., கும்பகோணத்தில் மனிதநேய ஜனநாயக கட்சி இளம் புயல் ஆட்டோ தோழர்கள் சங்கத்தின் சார்பில் குடந்தை மஜக நகர செயலாளர் நிஜாம் மைதீன் அவர்கள் தலைமையில் கோடைக்கான தண்ணீர் பத்தல் திரக்கப்பட்டது. இதில் தஞ்சை வடக்கு மாவட்ட துணைசெயலாளர் முகமது யாசின், ஒன்றிய பொருப்பாளர் இப்ராஹிம்ஷா, குடந்தை நகர துணை செயலாளர் தஜீமல் ஆகியோர் கலந்துக் கொண்டார்கள். இக்கூட்டத்தில் எதிர் வரும் சட்டமன்ற தேர்தலில் மஜக எந்த கட்சியுடன் கூட்டணி அமைக்கிறதோ அந்த கட்சிக்கு தான் அனைவரும் ஓட்டு போடுவோம் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது... எல்லாப் புகழும் இறைவனுகே...!!! -தகவல் : மஜக ஊடகப்பிரிவு குடந்தை நகரம்.
Author: admin
மஜக-அஇஅதிமுக தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை இன்று நலமுடன் முடிந்தது…
ஏப்.02., போயஸ்தோட்டத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் S.S.ஹாரூன் ரஷித் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் அஇஅதிமுக பொதுச்செயளாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர். இந்த சந்திப்பின்போது சுமுகமான தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை நலமுடன் முடிந்தது எனவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு அஇஅதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல்களில் 200 க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார். -தகவல் மஜக தலைமை ஊடகப்பிரிவு
வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி மாணவர்கள் மஜகவில் இணைந்தனர்.
வெங்கடேஷ் போன்ற தளபதிகளும் புறப்பட்டுவிட்டார்கள் மஜகவை நோக்கி!!!
மார்ச்.30., மனிதநேய ஜனநாயக கட்சி ஒரு பூஞ்சோலையாக மாறி வருகிறது . பல்வேறு சமுதாய மக்களிடமும் தாக்கத்தை மஜக ஏற்படுத்தியிருக்கும் நிலையில் , இளைய தலைமுறையினர் கூட்டம் கூட்டமாக இணைந்து வருகின்றனர். நமது அரசியல் மறுமலர்ச்சி மாநாட்டில் ஐந்தில் ஒரு பகுதியினர் முஸ்லிம் அல்லாத சகோதர, சகோதரிகள் என்பது பெருமகிழ்ச்சியை தருகிறது. மாநாட்டிற்கு மக்களை தங்கள் சொந்த செலவில் அழைத்து வந்த பலருள் தம்பி வெங்கடேஷும் ஒருவர். நூற்றுக்கும் மேற்பட்டவர்களை அவர் அழைத்து வந்திருந்தார். அது போல் சென்னையில் I.T. துறையில் வேலை செய்யும் தம்பிகள் மணி மாறன், நேசக்குமார் போன்றவர்களும் வாகனங்களில் மாணவர்களையும், இளைஞர்களையும் திரட்டி வந்திருந்தனர். அதேப்போல லயோலா கல்லாரி மாணவர் செபாஸ்டின் தனது கல்லூரி நண்பர்களை வேனில் அழைத்து வந்திருந்தார். இவர்களை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. இவர்களுக்கெல்லாம் மஜக அரசியல் தாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது . மற்ற தலைமைகளை புறக்கணித்துவிட்டு இவர்கள் மஜக-வின் தலைமையை அங்கீகரித்திருப்பது தமிழக பொதுவாழ்வில் ஆரோக்கியமான திருப்புமுனையாகும். நம்மை நம்பி பல்வேறு சமுதாயங்களை சேர்ந்த இளைஞர்களும் , மாணவர்களும் வருகிறார்களே என நினைக்கும்போது எமக்கு மிகுந்த பொறுப்புணர்வு ஏற்படுகிறது. சமூக நீதி,
திமுக பிரமுகர் மஜகவில் இணைந்தார்…
மார்ச்.29.,திருவண்ணாமலை மாவட்டம் போரூர் வட்டம் மண்டக்குளத்தூர் 'ஊராட்சி மன்ற தலைவரும்' திமுக மாவட்ட இலக்கிய அணி முன்னால் செயலாளரும், தலைசிறந்த பேச்சாளருமான M.E.பஷீர் அஹமது அவர்கள் பொதுச்செயலாளர் M.தமீமுன் அன்சாரி முன்னிலையில் மஜக வில் இணைந்தார். இந்நிகழ்வின் போது துணைப்பொதுச்செயலாளர் மைதீன் உலவி, மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜிதீன் மற்றும் மாநில துணைச்செயலாளர் கோவை பஷீர் அஹமது ஆகியோர் உடன் இருந்தனர். மஜக ஊடகப்பிரிவு