மஜக-அஇஅதிமுக தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை இன்று நலமுடன் முடிந்தது…

mjk_poyasgarden_pressmeet_1

ஏப்.02., போயஸ்தோட்டத்தில் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயளாளர் M.தமிமுன் அன்சாரி மற்றும் பொருளாளர் S.S.ஹாரூன் ரஷித் மற்றும் கட்சி தலைமை நிர்வாகிகளுடன் அஇஅதிமுக பொதுச்செயளாளரும் தமிழக முதலமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களை சந்தித்து வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுக்கான தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

இந்த சந்திப்பின்போது சுமுகமான தேர்தல் கூட்டணிபற்றிய பேச்சுவார்த்தை நலமுடன் முடிந்தது எனவும் பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு அஇஅதிமுக கூட்டணி சட்டமன்ற தேர்தல்களில் 200 க்கும் மேற்ப்பட்ட தொகுதிகளில் வெற்றிபெறும் எனவும் மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி அவர்கள் கூறினார்.

-தகவல் மஜக தலைமை ஊடகப்பிரிவு