தொடக்கத்தில் இந்த நூற்றாண்டின் இரும்பு பெண்மணியாக தன்னை உலகுக்கு நிரூபித்துக்காட்டிய வீராங்கனைதான் இரோம் சர்மிளா. இந்தியாவின் கிழக்கு வாசல் எனப்படும். அழகிய பூமியாம் மணிப்பூரில் 1972 ல் பிறந்தவர். இன்று மணிப்பூரின் மாணிக்கமாக அம்மக்களால் பெருமையுடன் பேசப்படுகிறார். மண்ணுரிமை உணர்வுகளும், முற்போக்கு சிந்தனைகளும் நிரம்பி தழும்பும் வட கிழக்கு மாநிலங்களில் காஷ்மீரைப் போல இந்திய அரசுப் படைகளின் வரம்பு மீறிய அராஜகங்களும், கற்பழிப்புகளும் நடைபெறுகின்றன. தங்கள் மண்ணை இந்தியா ஆக்கிரமிப்பதாகவும், தங்களுக்கு தனி நாடு வேண்டும் என்றும் 50 ஆண்டுகளுக்கு மேலாக வட கிழக்கு பகுதிகளை 7 மாநிலங்களிலும் விடுதலை போராட்டங்கள் வெடித்தன. அஸ்ஸாம், திரிபுரா, மேகலயா,மிசோரம், அருணாச்சல், ஆகிய மாநிலங்களில் போராட்டங்கள் தனித்து இந்திய ஒன்றியத்தோடு அம்மக்கள் பயணப் படுகிறார்கள். எனினும் நாகலாந்திலும், மணிப்பூரிலும் விடுதலைப் போராட்டங்கள் மக்கள் உணர்வுகளோடு கலந்து தொடர்கின்றன. தேசபக்தி என்ற பெயரிலும், பொது ஒற்றுமை என்ற பெயரிலும் தங்கள் உண்மையான வரலாறும், நீதிகளும் கொல்லப்படுகின்றது என போராட்டக் குழுக்கள் கூறுகின்றன. தேசபக்திக்கு முன்னால் உண்மைகளை பேசக்கூடாது என்பது தான் அரசு நீதியாக உலகம் முழுக்க பார்க்கப்படுகிறது. பலுச்சி மக்களின் உணர்வுகளை பாகிஸ்தானும், குர்து மக்களின் உணர்வுகளை துருக்கியும், ஈழத் தமிழர்களின்
Author: admin
குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை சார்பாக நடத்தும் “சுதந்திர இந்தியா” கருத்தரங்கம்…
இறைவனின் திருப்பெயரால்... *குவைத் மண்டலம் மனிதநேய கலாச்சார பேரவை* சார்பாக நடத்தும் *சுதந்திர இந்தியா கருத்தரங்கம்* நிகழ்ச்சி குவைத்தில் இயங்ககூடிய அனைத்து தமிழ் இயக்க, அமைப்பு நிர்வாகிகள், தொழிலதிபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்திய சுதந்திரம் பற்றிய தங்களது கருத்தாய்வை வழங்க இருக்கிறார்கள் அனைவரும் தவராது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம். நாள் : 12/08/2016 வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 6:00 மணிக்கு இடம் : பாரகான் உணவகம், அலி டவர், முர்காப் (KPTC பஸ்நிலையம் பின்புறம்) இவண், மனிதநேய கலாச்சார பேரவை மனிதநேய ஜனநாயக கட்சி குவைத் மண்டலம், 55278478, 55260018, 60338005
சுதந்திர தினத்தை முன்னிட்டு மஜக சேலம்(கி) சார்பில் இரத்த தான முகாம்…
திருவாரூர் மாவட்டம் எடையூர்-சங்கேந்தி மஜக கொடியேற்று நிகழ்ச்சி
ஆக.08., திருவாரூர் மாவட்டம் நாச்சிகுளம் அருகில் எடையூர்-சங்கேந்தி மனிதநேய ஜனநாயக கட்சியின் கொடியேற்றுவிழா இன்று மாலை 5 மணியவில் சங்கேந்தி பேருந்து நிறுத்த அருகில் நடைபெற்றது. இதில் எடையூர்-சங்கேந்தி மஜக செயலாளர் தமிம் அன்சாரி வரவேற்புரை நிகழ்த்தினார். மஜகவின் மாநில செயலாளர் நாச்சிகுளம் தாஜுதீன் அவர்கள் கொடியேற்றி வைத்து சிறப்புரை நிகழ்த்தினார் . இந்நிகழ்ச்சியில் எடையூர் சங்கேந்தி ஜமாத் தலைவர் என்.ஹாஜா அலாவுதீன் அவர்களும் , முத்துப்பேட்டை முன்னால் நகர செயலாளர் நியாஸ், இளைஞரணி செயலாளர் அசார்தீன், நாச்சிகுளம் நிர்வாகிகள் யாஸர், பாயிஸ், யாஸீன், நியாஸ், சதாம் மற்றும் தொண்டர்கள் பலரும் பெரும் திரளாக கலந்து கொண்டணர். வருகை தந்த அணைவர்களுக்கும் இனிப்புகள் வழங்கி இறுதியாக சமீர் அவர்கள் நன்றிகூறினார். தகவல் : மஜக ஊடகபிரிவு.
உற்சாகம் பெரும் நாகை கடற்கரை…
ஆக.08., நேற்று (07.08.16) மாலை நாகை கடற்கரையில் சிறுவர் பூங்கா வளாகத்தில் மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் ரோட்டரி கிளப் சார்பில் தொடங்கி வைக்கப்பட்டது. இதுநாள் வரை கலையரங்கம் பயன்படுத்தப்படாமல் இருந்தது அதை பயனுள்ளதாக மாற்றும் வகையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ரோட்டரி கிளப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இனி 15 நாட்களுக்கு ஒருமுறை பொதுமக்களை மகிழ்ச்சி படுத்தும் வகையில் ரோட்டரி கிளப் சார்பில் நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. அதனுடைய முன்னோட்ட தொடக்க நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சு.பழனிசாமி மற்றும் நாகை சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன் அன்சாரி கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் மு.தமிமுன்அன்சாரி, இது போன்ற முயற்சிகளை முன்னெடுக்கும் போது பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அப்போதுதான் திட்டங்களை விரைவாக தொடர முடியும் என கூறினார். மேலும், தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ஐந்து இலட்ச ரூபாய் செலவில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். அதை அறிவிப்பு செய்த உடன் அனைவரும் கைதட்டி வரவேற்றனர். இந்நிகழ்வில், பிரைம் ஆர்க்கிடெக் கல்லூரியின் தாளாளர் இராமதாஸ், EGSP கல்வி குழுமங்களின் செயலாளர் பரமேஸ்வரன், நகர்மன்ற உறுப்பினர் ஆர்.சந்திரமோகன்,