இந்தியாவின் 75 வது சுதந்திர தின பவள விழா மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மரக்கன்றுகள் விநியோகம், ரத்த தான முகாம்கள், மருத்துவ முகாம்கள், மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழங்கள் வழங்குதல், ஆதரவற்றவர்களுக்கு உணவிடுதல், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் என மஜகவினர் சுதந்திர தின பவள விழாவை தேசிய கொடியேற்றி கொண்டாடி வருகின்றனர். இன்று காலை தோப்புத்துறையில் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் தேசிய கொடி ஏற்றினார். அப்போது உறுதி மொழி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. பிறகு தேசிய கீதம் பாடப்பட்டது. பிறகு அனைவருக்கும் சந்தனம், செம்மரம், நெல்லி மரக்கன்றுகள் வழங்கி மஜகவினர் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். முக்கிய சேவகர்களுக்கு சிறப்பு மரியாதையும் செய்யப்பட்டது. கொரோனாவில் ஆதரவற்றவர்களுக்கு பணியாற்றிய ஈகா தர்ம ஸ்தாபன நிர்வாகி R.மோகன ராஜசேகரன், கொரணாவில் மருத்துவ பணியாற்றிய ஜலால், சதாம், இம்தியாஸ் ஆகியோருக்கு சால்வை அணிவித்து பொதுச் செயலாளர் சிறப்பு செய்தார். இந்நிகழ்வுக்கு மாவட்ட துணைச் செயலாளர் அகமதுல்லா தலைமை தாங்கிட, தலைமை செயற்குழு உறுப்பினர் ஷேக் மன்சூர், நகரச் செயலாளர் முகம்மது ஷெரிப் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர்களாக ஜமாத் தலைவர்
Tag: 75th Independence day
75வது சுதந்திர தினம்! மஜக தலைமையகத்தில் மாநில செயலாளர் சீனிமுகம்மது தேசிய கொடியேற்றினார்.!
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் தலைமையகத்தில் மாநில செயலாளர் சீனி முகம்மது அவர்கள் தேசிய கொடியேற்றினார். சமூக இடைவெளியுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் மத்திய சென்னை கிழக்கு மாவட்ட செயலாளர் பிஸ்மில்லா கான் தலைமையிலான மாவட்ட, நகர, கிளை நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டது, தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி #MJKITWING #தலைமையகம் 15.08.2021
லால்பேட்டையில் மஜக சார்பில் சுதந்திர தின விழா!
75 வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக லால்பேட்டையில் மஜக அலுவலகத்தில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டது. இதில் மாவட்ட செயலாளர் O.R ஜாகீர் ஹூசைன் கலந்து கொண்டு தேசிய கொடியினை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கியாசுதீன் மற்றும் பேரூர் நிர்வாகிகளும், சமூக ஆர்வலர்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #கடலூர்_தெற்கு_மாவட்டம்.
திருப்பூண்டியில் மஜக சார்பில் சுதந்திரதின கொண்டாட்டம்! இணையவழி சேவையை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி உற்சாகம்!!
75-வது இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூண்டி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பாக மூன்று இடங்களில் தேசிய கொடி ஏற்றி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் J .ஷாகுல் ஹமீது தலைமையில், மாவட்ட துணை செயலாளர் M.சபுருதீன் மற்றும் விவசாய அணியின் மாவட்ட செயலாளர் V.ஜெக்கரியா ஆகியோர் கொடிகளை ஏற்றினர். தொடர்ந்து மஜக சார்பில் ஆதார் அட்டை, பான் கார்டு இணைத்தல், கணினி சிட்டா நகல் எடுத்தல் உள்ளிட்டவை சேவைகளை மாலை வரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய, கிளை, அணி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். தகவல்; #மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி, #MJKitWING #நாகை_மாவட்டம்.