மின் விபத்தில் பாதிக்கப்பட்ட மஜக நிர்வாகி! பொதுச்செயலாளர் நேரில் சென்று நலம் விசாரித்தார்!

ஆகஸ்ட்:21., மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி புறநகர் மாவட்ட துணைச் செயலாளர் முகமது தாரிக், அவர்கள் கடந்த மாதம் பணிபுரியும் இடத்தில் மின்சாரம் தாக்கி விபத்து க்குள்ளாகி நெல்லையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்று நெல்லை வருகை தந்த மஜக வின் பொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் மருத்துவ மனைக்கு சென்று அவரை நலம் விசாரித்தார், பின்னர் அவரின் பெற்றோர்களிடம் உடல் நிலை குறித்தும் கேட்டறிந்தார்.

அவருடன் மாநில செயலாளர் நாச்சிக்குளம் தாஜூதீன் மாநில துணைச் செயலாளர்கள் காயல் சாகுல், நாகை முபாரக், நெல்லை மாவட்ட செயலாளர் நெல்லை நிஜாம், கன்னி யாகுமரி மாவட்ட செயலாளர் ஃபிஜூருல் ஹஃபிஸ், தூத்துக்குடி புறநகர் மாவட்ட செயலாளர் முகமது நஜிப், பொருளாளர் ராசுகுட்டி, தலைமை செயற்குழு உறுப்பினர் ஜாஹிர் உசேன், வழக்கறிஞர் அஹமது சாஹிப், உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

தகவல்

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_மாவட்டம்
20.08.2021