வேலூரில் பேரெழுச்சி!! மஜகவில் இணையும் இளைஞர் பட்டாளம்!!


வேலூர்.மார்ச்.08,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சேவை அரசியலின்பால் ஈர்க்கப்பட்டு தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு மக்கள் தன்னெழுச்சியாக மஜகவில் இணைந்து வருகின்றனர்.

அதன் ஒரு நிகழ்வாக வேலூர் மாவட்டம் காட்பாடி வடுகங்குட்டை சேர்ந்த இளைஞர்கள் மாவட்ட துணை செயலாளர் ஜாகிர் உசேன் முன்னிலையில் 30-க்கும் மேற்பட்டோர் தன்னெழுச்சியாக தங்களை மஜகவில் இணைத்து கொண்டனர்.

புதிதாக கட்சியில் இணைந்தவர்கள் மத்தியில் கட்சியின் கொள்கை மற்றும் கட்சியின் வளர்ச்சி பணிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட துணைச் செயலாளர் சையத் உசேன், மாவட்ட இளைஞர் அணி செயலாளர் அமீன், வர்த்தகர் அணி செயலாளர் பட்டேல் ஷமில், மற்றும் ஹாஜிபூரா அயாத், வடுகங்குட்டை சேட்டு உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

தகவல்,
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#வேலூர்_மாவட்டம்
08-03-2021