வேளாண் சட்டங்களை திரும்ப பெறும் வரை போராடுவோம்! நாகை மஜக ஆர்ப்பாட்டத்தில் பொதுச்செயலாளர் மு தமிமுன் அன்சாரி MLA பேச்சு!


ஜனவரி. 28,

டெல்லியில் விவசாயிகள் மீது நடைப்பெற்ற அரச வன்முறைகளை கண்டித்தும், சர்ச்சைக்குரிய 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இன்சூரன்ஸ் தொகையை முழுமையாக பெற்றுக் கொடுக்க கோரியும், தமிழக அரசு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க கோரியும் நான்கு விவசாய கோரிக்கைகளை முன் வைத்து நாகை மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

தலைமை தபால் நிலையம் எதிரே நடைப்பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் திட்டச்சேரி ரியாஸ் தலைமை ஏற்றார்.

இதில் மாநில துணைச்செயலாளர் நாகை முபாரக் முழக்கங்களை எழுப்பி தொடங்கி வைத்தார்.

இதில் காவிரி விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் தலைவர் காவேரி தனபாலன், மார்ஸிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் நாகை மாலி EX.MLA, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் பாண்டியன், தமிழக விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ராமதாஸ், கடைமடை விவசாயிகள் சங்க தலைவர் தமிழ் செல்வன் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

நிறைவாக பேசிய பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் பேசும் போது, விவசாயிகள் 65 நாட்களாக போராடி வருகிறார்கள்.

இதுவரை 64 விவசாயிகளை பறிகொடுத்து போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

குடியரசு தினத்தன்று அமைதியாக போராடிய விவசாயிகளுக்கு மத்தியில் வலதுசாரி மதவெறிக் கும்பல் புகுந்து கலவரம் செய்துள்ளார்கள். இது குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும். அங்கு போராட்டத்தில் இறந்த விவசாயிக்கு மத்திய அரசு 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் வரை போராடுவோம் என்றும் விவசாய சங்கங்களோடும், பொதுவுடைமை கட்சிகளோடும், சமூக நீதி அமைப்புகளோடும் இணைந்து போராடுவோம் என்றும் பேசினார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் சதக்கத்துல்லாஹ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் சேக் மன்சூர், திருப்பூண்டி சாகுல், மாவட்ட துணை செயலாளர்கள் சபுர்தீன், அகமதுல்லா, முன்சி யூசுப்தீன், கண்ணு வாப்பா @சாகுல் ஹமீது மாவட்ட அணி நிர்வாகிகள் ஆரிப் ,ரெக்ஸ் சுல்தான்,அப்துர் ரஹ்மான், பாரக், ஒன்றிய செயலாளர்கள் நகர நிர்வாகிகள் என திரளான மஜக தொண்டர்கள் பங்கேற்றனர்.

போராட்டத்தில் பங்கேற்ற அனைவர்களுக்கும் முக கவசங்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி,
#MJKitWING
#நாகை_மாவட்டம்.