பொதுப்போக்குவரத்து ஓட்டுனர்களின் குறைகளை சரி செய்ய வேண்டும்!! தென்காசி மாவ‌ட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளித்த மஜகவினர்!!

தென்காசி : செப் 16.,

தென்காசி மாவட்ட மனிதநேய ஜனநாயக கட்சி மற்றும் சார்பு அமைப்பான மனிதநேய ஜனநாயக தொழிற்சங்கம் சார்பாக தென்காசி பழைய பேருந்து நிலையத்தில் அமை‌ந்து‌ள்ள காய்கறி வணிக வளாகம் மாற்றி அமைக்க வேண்டியும், கொரோனா தாக்கத்தால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பொதுப் போக்குவரத்து ஓட்டுனர்களின் வாகன தவணைகளுக்கு கால அவகாசம் வழங்க கோரியும்,
மாவ‌ட்ட செயலாளர் M. பீர் மைதீன் அவர்களின் தலைமையில் தென்காசி மாவ‌ட்ட ஆட்சித் தலைவரிடம் மனு அளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தென்காசி மாவ‌ட்ட துணை செயலாளர்கள் ஆதம் பின் ஹனிபா, பண் பொழி அபுதாஹிர், மாவ‌ட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் சிலம்பாட்ட சாகுல், தொழிற்சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, மற்றும் ஒன்றிய இளைஞரணி செயலாளர் முத்து கணேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தகவல்,

#மஜக_தகவல்_தொழில்_நுட்ப_அணி
#MJK_IT_WING
#தென்காசி_மாவட்டம்
15.09.2020