சாத்தான்குளம் இரட்டை படுகொலைக்கு நீதி கோரி கோவை வடக்கு மாவட்ட மஜக சார்பாக போராட்டம்..!!


மேட்டுப்பாளையம்.ஜூன்.28.,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல்துறை அதிகாரிகளின் காட்டுமிராண்டித்தனத்தால் கொலை செய்யப்பட்ட வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதிகேட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் கோவை வடக்கு மாவட்டம் சார்பில் ஆர்ப்பாட்டம் கோவை வடக்கு மாவட்டச் செயளாலர் VMT.ஜாபர், அவர்கள் தலைமையில், நடைபெற்றது.

இப்போராட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில இளைஞரணி துணை செயலாளர் R.முகம்மது அப்பாஸ், கலந்து கொண்டு கண்டன கோஷம் எழுப்பி உரையாற்றினார்.

இதில் மாவட்ட பொருளாளர் SMR.பாரி, மாவட்ட துணை செயலாளர்கள் யாசர் அரபாத், அன்னூர் ரியாஸ், தொழிற்சங்க மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, மாவட்ட செயலாளர் முகம்மது அப்சல், மாவட்ட பொருளாளர் காஜாமைதீன், சேட், உள்ளிட்ட மஜக பகுதி, கிளை நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டு காவல்துறையின் காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

தகவல்;
#மஜகதகவல்தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#கோவைவடக்குமாவட்டம்
28-06-2020