மதுரை ஆர்ப்பாட்டத்தில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவிப்பு இன்று மதுரையில் ஜல்லிக்கட்டை ஆதரித்து மனிதநேய ஜனநாயக கட்சி, தமிழக கொங்கு இளைஞர் பேரவை, முக்குலத்தோர் புலிப்படை ஆகிய கட்சிகள் இணைந்து மக்கள் திரள் போராட்டத்தை நடத்தினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA, தனியரசு MLA, கருணாஸ் MLA ஆகியோர் உரையாற்றினர். இதில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி பேசியதின் சுருக்கம் பின்வருமாறு தமிழ்ச் சமுதாயத்தின் உறவுகளே.... தமிழ்ச் சமுதாயத்தின் பாரம்பரிய உரிமை காக்க நாம் ஒன்று கூடியிருக்கிறோம். இங்கு தேவரையாவின் வாரிசுகள், தீரன் சின்னமலையின் வாரிசுகள், காயிதே மில்லத்தின் உறவுகள் என எல்லோரும் ஒன்று சேர்ந்திருக்கிறோம். தமிழ் இன ஒற்றுமைக்காக அனைத்து சமூகங்களையும் ஒருங்கிணைப்போம். தமிழ் சமுதாயத்தின் பண்பாட்டு நிகழ்வுகளில் ஒன்று ஜல்லிக்கட்டு, உலகம் முழுக்க வெவ்வேறு நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் இது நடைபெறுகிறது. தாய்லாந்து, ஸ்பெயின், மெக்ஸிகோ, நியுசிலாந்து என பல நாடுகளில் உள்ளது. வெளிநாடுகளில் போட்டி முடிந்ததும் காளைகளை கொன்று விடும் பழக்கம் உள்ளது. ஆனால் இங்கு போட்டி முடிந்ததும் காளைகளுக்கு பரிசளித்து கொண்டாடுகிறோம். ஆனால்,காளைகளை வதை செய்கிறோம் என்கிறார்கள், கேரளாவில் 100 யானைகளை வைத்து நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.யானைகளை இதற்காக இம்சிக்கிறார்கள்.இதை உங்களால்
மனிதநேய ஜனநாயக கட்சி (மஜக)
மாணவர்கள் இளைஞர்களுக்கு வாழ்த்துக்கள்!
( மஜக பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்களின் சமூக இணையதள பதிவு ) மீண்டும் தமிழ்நாடு இளம் தமிழ் போராளிகளால் மீட்டெடுக்கப்பட்டுள்ளது. இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் தன்னெழுச்சியாக பங்கேற்ற மாணவர்-இளைஞர் சமூகம், பின்னர் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்தையும் வழி நடத்தியது. சந்தைப் பொருளாதார யுகம், தகவல் தொழில்நுட்ப மோகம் என உலகம் மாறிய தருணத்தில் 1990 முதல் 2010 வரை இருபது ஆண்டுகள் மாணவர் போராட்டங்கள் காணாமல் போயின. 2010ல் விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரன் அவர்களின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட புகைப்படங்கள் வெளியானதை தொடர்ந்து மீண்டும் மாணவர் சமூகம் சோம்பல் முறித்து களமிறங்கியது. லயோலா கல்லூரி மற்றும் புதுக்கல்லூரி மாணவர்கள் மூட்டிய நெருப்பு தமிழ்நாட்டை அனலாக்கியது. தற்போது ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினாவில் சமூக இணைய தளங்களின் வழியாக தன்னெழுச்சியாக மாணவர்கள்-இளைஞர்கள் அணிதிரண்டு அனைவரையும் அதிர வைத்தனர். அது மதுரை, நெல்லை, கோவை என தொடங்கி எங்கும் பற்றியிருக்கிறது. இது வரவேற்கத்தக்க புரட்சிகர போக்காகும். பொது விவகாரங்களில் மாணவர்களும், இளைஞர்களும் களமிறங்கினால் நேர்மையான அரசியலும், நாகரிகமான பொதுவாழ்வும் வலுப்பெறும். நேர்மையான தலைவர்கள் வலிமைப்பெறவும், புதிய தலைவர்கள் உருவாகவும் வழிப்பிறக்கும். எனவே, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள்,
புதிய மின்மாற்றி அமைக்கும் பணி!
நாகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சியில் தேர்தலில் வெற்றிபெற்றதும் #M_தமிமுன் அன்சாரி_MLA அவர்கள் நன்றி தெரிவிக்கும் போது பொதுமக்கள் அவருடம் மனுக்கள் கொடுத்தனர். அதில் எங்கள் பகுதியில் மின்சாரம் பட்றாகுறையால் (LOW VOLTAGE) மின்சாதன பொருட்கள் எல்லாம் பளுதாகி விடுவதால் புதிய டிரான்ஸ்பாரம் அமைத்து தறுமாறு கோரிக்கை வைய்தனர். உடனே சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு அந்த மனு அனுப்பபட்டு அதிகாரிகளையும் தெடர்பு கொண்டு புதிய டிரான்ஸ்பாரம் அமைக்க உத்தரவு விட்டார். தற்போது பணிகள் நடைப்பெறுகின்றது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்.
திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மஜக வாழ்த்து!
(மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை) திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல்தலைவராக திமுக பொதுக்குழுவில் முடிவு செய்யப்பட்டு இருக்கும் அண்ணன் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு மனிதநேய ஜனநாயக கட்சி சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறோம். தனது இளம் வயது முதல் திமுகவில் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றி வரும் அவருக்கு உரிய நேரத்தில் உரிய அங்கிகாரம் கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் சமூகநீதி, மதச்சார்பின்மை, தமிழர் பண்பாடு, திராவிட இயக்கம் மற்றும் தமிழ்நாட்டின் வளங்களுக்காக அவர் சிறப்பாக பணியாற்றுவார் என்ற நம்பிக்பிக்கையிருக்கிறது. அவருக்கும், அவரை தேர்ந்தெடுத்த திமுக பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் எங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். இவண், M. தமிமுன் அன்சாரி MLA, பொதுச்செயலாளர், மனிதநேய ஜனநாயக கட்சி. 04.01.2017
நாகை குடிநீர் பிரச்சனையை தீர்க்க ஆலோசனை!
நாகப்பட்டிணம் தொகுதியில் வறட்சி காரணமாக குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருகிறது. எதிர்வரும் கோடைக் காலத்தில் நெருக்கடியை சமாளிக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினர் M.தமிமுன் அன்சாரி பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறார். இதுகுறித்து முன்னாள் நாகை சட்டமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஜீவானந்தம், நாகை நகராட்சி முன்னாள் சேர்மன் மஞ்சுளா சந்திரமோகன் ஆகியோருடன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய (TWAD) அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பிறகு, இதுகுறித்து கலெக்டரையும் நேரில் சந்தித்து பேசினார். ஓடாச்சேரி, வாண்டையார் இருப்பு, கொள்ளிடம் ஆகிய பகுதிகளிலிருந்து கூடுதல் ஆழ்துளை குழாய்கள் அமைத்து தண்ணீர் கொண்டு வருவது குறித்து விவாதிக்கப்பட்டது. தகவல்; நாகை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம். 02.01.17