Evks இளங்கோவனை மஜக தேர்தல் பணிக்குழு சார்பாக துணை பொதுச்செயலாளர் S.A.சையது அகமது ஃபாருக் சந்திப்பு..!

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் திரு. EVKS.இளங்கோவன் அவர்களை,

மனிதநேய ஜனநாயக கட்சியின் ஈரோடு இடைத்தேர்தல் பணிக்குழு தலைவரும், கட்சியின் துணை பொதுச்செயலாளருமான S.A சையது அகமது ஃபாருக், மற்றும் தேர்தல் பணிக்குழு துணை தலைவரும், மாநில துணை செயலாளருமான பாபு ஷாஹின்ஷா ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் சந்தித்தனர்.

இச்சந்திப்பில் பிரச்சார வியூகங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

திரு. EVKS.இளங்கோவன் அவர்கள் பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் பிரச்சாரத்திற்கு தவறாமல் வரவேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

மேலும் இச்சந்திப்பின் போது பொதுச்செயலாளர் மு.தமிமுன் அன்சாரி அவர்கள் எழுதிய “புயலோடு போராடும் பூக்கள் ” புத்தகத்தையும், ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் நீண்டநாள் கோரிக்கைகள் அடங்கிய கடிதத்தையும் மாவட்ட செயலாளர் அ.ஷஃபிக் அலி வழங்கினார்.

இந்நிகழ்வில் ஈரோடு மேற்கு மாவட்ட செயலாளர் ஷானவாஸ், மேற்கு மாவட்ட பொருளாளர் பவானி சாதிக், தலைமை செயற்குழு உறுப்பினர் கொடிவேரி சாதிக், தகவல் தொழில்நுட்ப அணியின் மண்டல செயலாளர் எக்சான், மேற்கு மாவட்ட துணைச் செயலாளர்கள் ஜாகிர் உசேன், நஜீர், இளைஞரணி கிழக்கு மாவட்ட செயலாளர் திலீப்குமார், மாவட்ட தொழிற்சங்க தலைவர் A.சபர் அலி, தகவல் தொழில்நுட்பஅணி மாவட்ட செயலாளர் S.பாசித், கருங்கல்பாளையம் பகுதி செயலாளர் ஹாரிஸ், சக்தி நகர செயலாளர் ஜாஹிர்,சலீம் ஆகியோர் உடனிருந்தனர்.