75வது சுதந்திர தின விழா! திருவொற்றியூரில் மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் தேசிய கொடியேற்றினார்.!

நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மனிதநேய ஜனநாயக கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் சார்பில் திருவொற்றியூரில் சுதந்திர தின தேசிய கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.

மாவட்ட செயலாளர் நாசர் தலைமையில் நடைப்பெற்ற நிகழ்விற்கு மாவட்ட பொருளாளர் ஜாஃபர் வரவேற்புரையாற்றினார்.

மஜக மாநில இளைஞரணி செயலாளர் அஸாருதீன் கொடியேற்றி உறுதிமொழி கோஷங்களை முழங்கினார்.

நிறைவாக நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்து.

இந்நிகழ்வில் மாவட்ட துணைச்செயலாளர்கள் நிஜாம், மௌலானா, அன்சர் மற்றும் திருவொற்றியூர் பகுதி செயலாளர் வெங்கடேசன் மற்றும் மாவட்ட,பகுதி நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKitWING
#திருவள்ளூர்_கிழக்கு_மாவட்டம்
15.08.2021

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.