மஜக தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் இலவச மருத்துவ முகாம்..! மாநில துணைச்செயலாளர் A R சாகுல் ஹமீது முகாமை துவங்கி வைத்தார்..!!


தூத்துக்குடி.பிப்.21.,

மனிதநேய ஜனநாயக கட்சியின் தூத்துக்குடி வடக்கு மாவட்டம், அய்யனார் ஊத்து கிளை சார்பாக இன்று பெஜான்சிங் கண் மருத்துவமனை மற்றும் திரவியம் எழும்பு முறிவு மருத்துவமனை மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச மருத்துவ முகாம் கிளை செயலாளர் N.செய்யது அலி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு அழைப்பாளராக மஜக மாநில துணை செயலாளர் A.R சாகுல் ஹமீது கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்தார்,

மேலும் S.V.S.P மாணிக்கராஜா கயத்தார் ஒன்றிய பெருந்தலைவர், முத்து கயத்தார் காவல் ஆய்வாளர், ஹாஜி A.இக்பால் MNP தலைவர், சண்முகையா ஊராட்சி மன்றதலைவர், M.S.P.சந்தனபாண்டியன் Ex.ஊராட்சி மன்றதலைவர், A.பாத்திமா பீவி ஊராட்சி மன்றதுணைத் தலைவர், தங்கப்பாண்டியன் Ex ஊராட்சி மன்ற தலைவர், மெளலவி ஹாபிழ் A.அப்துர் ரஹீம் பைஜீ MNP இமாம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் P.முகமது தாரிக், U.சதாம் உசேன், கிளை துணை செயலாளர்கள் H.செய்யது இப்ராஹிம், P.அன்சாரி, I.மைதீன், R.J மதார் மைதீன், இளைஞரணி கிளை செயலாளர் N.நபில் அகமது, இளைஞரணி கிளை துணை செயலாளர் M.முகம்மது நிஷார், மாணவர் இந்திய கிளை செயலாளர் B.நாகூர் மீரான் மற்றும் M.முகம்மது அலி, N.சேக் அலி மற்றும் அய்யனார் ஊத்து கிளை நிர்வாகிகள் உள்ளிட்ட மனிதநேய சொந்தங்கள் கலந்து கொண்டனர்.

மேலும் இம்முகாமில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

தகவல்;
#மஜக_தகவல்_தொழில்நுட்ப_அணி
#MJKITWING
#தூத்துக்குடி_வடக்கு_மாவட்டம்
21-02-2021